புதன், 5 ஆகஸ்ட், 2015

google science forum -கூகுள் அறிவியல் இயக்கம்- சத்தியமங்கலம்.

          எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
                                                                                 -திருக்குறள் 110    


              எங்களுடன் இணையுங்க,தங்களுடைய ஆதரவைக்கொடுங்க....
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். கூகுள் நிறுவனத்தின் அளப்பரிய இலவச சேவைகளினால் இன்றைய காலத்தில் கடைநிலையிலுள்ள  சாதாரண மனிதனும் கணினி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை கற்கவும்,பயன்படுத்தவும் முடிந்தது.
          இதன் தொடர்ச்சியாக -
இருபால் மாணவர்கள், இளைய சமூகம்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்  
           கணினி மற்றும் மொபைல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு போன்ற தகவல் தொடர்பு சார்ந்த பயனுள்ள பல விசயங்களை  INTERNET TAMIL FRIENDS SATHY - தமிழ் இணையதள நண்பர்கள் என்ற பெயரில் செயல்பட்ட வலைப்பதிவின் பெயரை 2015 ஆகஸ்டு 8ந் தேதி இன்று முதல்
'' GOOGLE SCIENCE FORUM-கூகுள் அறிவியல் இயக்கம்'' 
           என்று பெயர் மாற்றப்பட்டு சமூகநலனுக்கான தகவல்களை வெளியிட்டும் , இயக்கங்கள் நடத்தியும் கூகுள் நிறுவனத்திற்கு நன்றி செலுத்த உள்ளோம். 
       இந்த தளத்தில் தாங்களும் இணைந்துகொண்டு  மேலான ஆதரவையும் ஆலோசனைகளையும் கொடுத்து உதவுங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
சமூக நலன் கருதி 
உங்களது அன்பன் 
C.பரமேஸ்வரன்.செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
 (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
சத்தியமங்கலம் ,
ஈரோடு மாவட்டம். 
தமிழ்நாடு.638402
http://googlescienceforum.blogspot.com,
 http://consumerandroad.blogspot.com,
http://konguthendral.blogspot.com,
http://paramesdriver.blogspot.com.
E - MAIL paramesdriver@gmail.com


   இன்று வரை பார்வையிட்டவர்கள் 17616




திங்கள், 27 ஜூலை, 2015

இணையதளங்களினால் நன்மைகளும்,தீமைகளும்.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். இன்றைய சூழலில் இணையதளங்களினால் மனித சமூகத்திற்கு நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதற்கேற்ப ஏற்படுகின்றன.அதைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.

                   இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
                  உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
                  இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.


சில சமூக வலைதளங்கள்
                       பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும்  அதிகமாக உள்ளன. Facebook, Twitter, Linked in, My space, Ning, Google+, Tagged, Orkut, Hi5, My year book, Youtube, Flicker, Digg போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற Facebook மற்றும் Twitter ஆகியவை மிகவும் பிரபலமான வலைதளங்களாகும்.

                         கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ ?(Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட் போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் 24 மணி நேரமும் இருந்த இடத்திலிருந்தே சமூக வலைதளங்கலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு பார்வியிடலாம் என்பதுதான்.
தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளம் ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இதன் வாயிலாக புளுடூத் வசதி இல்லாமலேயே இணையத்தின் வழியாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், வாழ்த்துக்கள் என அனைத்தையும் பிறரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். நவீனத் தொழுல்நுட்பங்கள் கையடக்கத்தில் இருப்பதால் அனைவரின் பார்வையும் ஸ்மாட் போன்கள் மேல் திரும்பியுள்ளன.
இந்த வாட்ஸஅப்பை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு முகநூல் வாங்கியுள்ளது. ஏதேனும் ஒரு வகையில் மக்களைக் கவர்வதற்காகவே சமூக வலைதளங்கள் முயல்கின்றன. புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதே சமூக வலைதளங்களின் நோக்கமாகின்றன.
”வலைதளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை முகநூலில் 80 கோடியும் டிவிட்டரில் 20 கோடி, லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடியும், குருப் ஆன் தளத்தில் 11.5 கோடியும், கூகுள் பிளஸில் 9 கோடிபேரும் சீனைவைச் சார்ந்த சமூக வலைதளங்களான ரென்ரென் 17 கோடிபேரும், கியூஜோன் 50 கோடிபேரும், சீனா வைபோ 25 கோடிபேரையும் மற்றுமுள்ள பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.”
சமூக மாற்றம்
            மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் கேவலமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை கிண்டலும் கேலியும் செய்யப்படுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்மைகள்.
               சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் தருகின்றன.கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், உலக மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

உறவுகளுக்குப் பாலம்
            தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

வணிக வளர்ச்சி.
           வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

கருத்துப் பரிமாற்றம்
               பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

தீமைகள்
            சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஏமாற்று வேலைகள்
             அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

குற்றங்கள்
        சமூக வலைதளங்களின் உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலீசாருக்கு திண்டாட்டத்தை  ஏற்படுத்துகிறது.

அதிகப்பயன்பாட்டின் விளைவு.
          அலைபேசியில் 24 மணி நேரமும் சமூக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

                  பெருமளவில் மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயனர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். சிறுவர்களும் இளைய சமூகத்தினரும்தான் பெரும்பாலானவர்களாக இருந்து வருகின்றனர்.
           சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது” (tamil. Thehindu.com) என 27-10-2014 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” (http/ponseinilam.blogspot.in) என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது.

               இதுபோல பலவகையான குற்றங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமுக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமூக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆஹ்டிலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.


               இன்டர்நெட்டால் நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும், தீமைகள் பல்கிப் பெருகி, மனித குலத்தை மிரட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆன்லைன் வாயிலாக கிரடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கிக்கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக இணைய தளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுவது போன்ற சைபர் குற்றங்கள் நடக்கின்றன.
* சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இன்டர்நெட் மூலம் வர்த்தகம் செய்யும் போது, "ஹேக்கர்ஸ்' (இன்டர்நெட் திருடர்கள்), நமது ரகசிய எண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் பணம் பறிபோகலாம்.
* தேவையில்லாத இ-மெயில்கள் வரும். அதை "கிளிக்' செய்யும் போது, அது தவறான இணையதளத்துக்கு நம்மை கொண்டு செல்லும். அல்லது கம்ப்யூட்டருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* இன்டர்நெட்டின் பயன்பாடு காரணமாக, புதிய தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் தெரிந்து கொள்கின்றனர். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிறது.
* இளம் தலைமுறையினர், இன்டர்நெட்டை பயன்படுத்துவது, அக்னி பரீட்சை போல. ஏனெனில், தற்போது "ஆபாச' இணையதளங்கள் பெருகிவிட்டன. இவை இளம் தலைமுறையினரின் மனதை கெடுத்து விடும். சைபர் குற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
* கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது, வைரசால் கம்ப்யூட்டர் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முக்கியமான தகவல்கள் அழிந்து விடுகின்றன.
* இணையத்தில் சாட் செய்யும் போது, அறிமுகம் இல்லாதவரின் ஆசை வலையில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.

என்ன செய்ய வேண்டும்:
* இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
* முடிந்தளவு சமூக தளங்களில், தனிப்பட்ட விவரங்கள், போட்டோக்கள், வங்கி விவரங்கள், மொபைல் எண்கள், வீட்டு விலாசம் போன்றவற்றை வெளியிடாமல் தவிர்ப்பது நல்லது.
* ஆசை காட்டி வரும் மெயில்களை நம்பி, அந்த இணையதளங்களுக்குள் செல்லாதீர்கள்.
* "பல கோடி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்' என்று கவர்ச்சி காட்டும் மெயில்களில் குறிப்பிடப்படும், இணையதளங்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
* பெண்களின் பெயர்களில் செய்யப்படும் "சாட்டிங்', பெரும்பாலும் போலியாக இருக்கும். இதிலும் கவனம் தேவை.
* தொடர்ந்து இன்டர்நெட்டை பார்க்கும்போது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை விட்டு, வேறு பொருட்களை பார்த்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
* தினமும் கண்களை, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி செய்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்யுங்கள். கண்களில் பார்வை கோளாறு இருந்தால், உடனே கண்ணாடி அணியுங்கள். இல்லாவிட்டால், கோளாறு அதிகரிக்கும வாய்ப்பு உள்ளது.

புதன், 22 ஏப்ரல், 2015

மொபைல் போனில் 2G, E , 3G , H ,H+தெரிஞ்சுக்கோங்க!.......

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம். மொபைல் போன் டேட்டா பற்றி தெரிந்துகொள்வோம்.

தெரிந்து கொள்வோம்
நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.
நன்றி:

வியாழன், 12 மார்ச், 2015



உழவும் பசுவும் ஒழிந்த கதை!
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.
இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.
நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.
நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.
அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.
ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.
1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.
இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.
இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.
நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.
இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்துபறித்துச் செல்லப்படுகின்றன.
விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.
விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களைவிளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின்புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.
இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.
இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.
அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.
இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.
ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?
பசுவதை 🐂தடுப்போம்
தேசம் 🐂காப்போம்

திங்கள், 10 நவம்பர், 2014

கணினியும்,மொபைலும் -இயங்குதளமும்

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 இந்தப்பதிவில் கணினி இயங்குதளம் மற்றும் மொபைல் போன் இயங்குதளம்  பற்றி காண்போம்.
           
             மோட்டார் வாகனங்கள் உட்பட தொழிற்சாலை இயந்திரங்கள் வரை அனைத்திற்கும் குறிப்பிட்ட வேலைகளைச்செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன.ஆனால் 

                  கணினிக்கு மட்டும் குறிப்பிட்ட வேலையைச்  செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்படாமல் கொடுக்கும் கட்டளைகளை ஒழுங்காகப் பின்பற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
                        கணினி பின்பற்ற வேண்டிய  கட்டளைகளை புரோகிராம் என்கிறோம்.கணினி ஒவ்வொரு புரோகிராம்களையும் இயக்குகிறது.அதாவது ஒவ்வொரு கட்டளைகளையும் வரிசையாகப் பின்பற்றுகிறது என்று பொருள் ஆகும்.

   கணினி என்பது நமது உடலைப் போன்றது. வன்பொருட்களைக் கொண்டது. அதாவது  உறுப்புக்களைக்  கொண்டது. இயங்குதளம் என்பது மென்பொருள் ஆகும். நமது உயிரைப்போன்றது.

                 உயிர் இல்லாமல் உடலால் எவ்வித இயக்கமும் இல்லை.பயன்களும் இல்லை.வன்பொருட்கள் என்பன கணினி திரை,அமைப்பின் தொகுப்பு,விசைப்பலகை,சுட்டெலி,மின்வழங்கி போன்றவை.நமது கண்களுக்கு தெரியும் திடப்பொருட்களால் ஆனவை.

           மென்பொருட்கள் என்பன கண்ணுக்குத்தெரியாது.கட்டளைத்தொகுப்பு ஆகும். 
                 மென்பொருளில் இரு பிரிவுகள் உள்ளன.அவை (1)அப்ளிகேசன் (செயலி) சாப்ட்வேர்,(2)சிஸ்டம் சாப்ட்வேர் (தளத்தை இயக்குபவை-இயங்குதளம்) ஆகும். 

                   குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வேலையை செய்ய ஒரு புரோகிராம் திட்டமிடல் தேவை.உதாரணமாக ஒரு தேதி மற்றும் நேரத்தைக்குறிப்பிட ஒரு புரோகிராம் எழுத வேண்டும்.நமது விருப்பங்களைத்தேடுவதற்கு ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

             இவ்வாறு சிறியதிலிருந்து பெரியவை வரை எல்லா புரோகிராம்களும் சேர்ந்த தொகுப்பே மென்பொருள் என்கிறோம்.
                இந்த மென்பொருள்ளில் ஒரு பிரிவுதான் ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளம் ஆகும்.இந்த ஆபரேட்டிங் சிஸ்டம்தான் அப்ளிகேசன் சாப்ட்வேர் எனப்படும் செயலி மென்பொருளுக்கும் கணினி வன்பொருளுக்கும் இடையில் இணைப்பு கொடுக்கும் பாலமாக விளங்குகிறது.

                      இந்த இயங்கு தளமானது அனைத்து வகையான மின் சாதனங்களுக்கும் இயங்குவதற்கான புரோகிராம்களை எழுதி  உள்ளீடு செய்து பயன்படுத்தப்படுகின்றன.உதாரணமாக வாசிங் மெசின்,மைக்ரோ ஓவன்,குழ்தைகளின் விளையாட்டுப்பொம்மைகள் போன்றவை...
   
                கணினியில் பல பணிகளை மேலாண்மை செய்வது ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். அவை உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தல்,நினைவகத்தை மேலாண்மை செய்தல்,பணிகளை மேலாண்மை செய்தல்,கோப்புகளை மேலாண்மை செய்தல் ஆகும்.விசைப்பலகை,திரை,அச்சிடல்,போன்ற வன்பொருட்களை கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் மென்பொருளாகும்.
         
                 கணினி உபயோகத்திற்கு ,டாஸ்,விண்டோஸ்,யுனிக்ஸ்,லினக்ஸ் என பல ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

                    மொபைல் உபயோகத்திற்கு ஆன்டிராய்டு,விண்டோஸ் , சிம்பியன் , பிளாக் பெர்ரி , ரிம் , ஆப்பிள் ஐபோன்,வெப் ஓ.எஸ் என பலவகை ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன. 

                     இவற்றில் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதள மென்பொருள் மட்டும் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இலவசமானது ஆகும்.இது சுதந்திரமாக செயல்படும் மென்பொருள் ஆகும்.

                   மற்றவைகளுக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும்.அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் எந்த ஒரு மாற்றமோ,பயன்பாடோ செய்ய வேண்டும்.ஆனால் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு ஓ.எஸ் இலவசமானது.கட்டுப்பாடற்றது.

                   ஆன்டிராய்டு மென்பொருளை உலகளவில் தன்னார்வமுள்ள பல மென்பொருள் தயாரிப்பாளர்கள் பல லட்சம் மென்பொருட்களை இலவசமாகவும்,குறைந்த கட்டண விலையிலும் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான  சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
             இதன் சிறப்பு பொது விநியோக முறையாகும்.இதை யார் வேண்டுமானாலும் கேட்காமலேயே தங்களது மொபைலில் நிறுவி வெளியிட்டுக்கொள்ளலாம்.

ஆன்டிராய்டு போன் இன்று நம் வசமே!

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 ஆன்டிராய்டு போன் இன்று  நம் வசமே!

               இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.



போனுடன் வந்த சாப்ட்வேர்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய சாப்ட்வேர் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packingஅல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கம்ப்யூட்டர்களிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் "All" என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும். 
 


குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு "Bandwidth management" என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Reduce data usage" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும். 
 


ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
 


டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம். 


காட்சியை அழகுபடுத்த உங்கள் ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.


தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும். 
 


கீ போர்ட் மேம்படுத்தல்

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word predictionவசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
 


லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments),பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.



அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் "Show notifications" என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது. 



முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு "Manage labels" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து "Sync messages" என்பதனைத் தேர்ந்தெடுத்து, "Sync: Last 30 days" என்பதற்கு மாற்றவும். இறுதியாக, "Label notifications" என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.



திரைக் காட்சி ஸூம் செய்திட

பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டை ப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு "Force enable zoom" என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.
நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் காலர் ரிங்டோன்: உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.
பிடித்த விடங்களை சேமிக்க: உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.
பவர் ஸ்ட்ரிப்: ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.
கால் ஸ்கிரீனிங்: ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு – ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.
திகதியை அறிய: ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.
லைவ் வால் பேப்பர்கள்: ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
டாஸ்க் கில்லர்: பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூமிங் ஆப்ஷன்: ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் டெஸ்ட்: மெனு – மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.
நேவிகேஷன் ஷார்ட்க்ட்: இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.
பிரவுஸர்: ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்.
- See more at: http://www.tamilserialtoday.com/2014/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/#sthash.vfC5vwgG.dpuf
நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் காலர் ரிங்டோன்: உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.
பிடித்த விடங்களை சேமிக்க: உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.
பவர் ஸ்ட்ரிப்: ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.
கால் ஸ்கிரீனிங்: ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு – ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.
திகதியை அறிய: ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.
லைவ் வால் பேப்பர்கள்: ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
டாஸ்க் கில்லர்: பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூமிங் ஆப்ஷன்: ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் டெஸ்ட்: மெனு – மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.
நேவிகேஷன் ஷார்ட்க்ட்: இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.
பிரவுஸர்: ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்.
- See more at: http://www.tamilserialtoday.com/2014/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/#sthash.vfC5vwgG.dpuf
நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் காலர் ரிங்டோன்: உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.
பிடித்த விடங்களை சேமிக்க: உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.
பவர் ஸ்ட்ரிப்: ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.
கால் ஸ்கிரீனிங்: ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு – ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.
திகதியை அறிய: ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.
லைவ் வால் பேப்பர்கள்: ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
டாஸ்க் கில்லர்: பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூமிங் ஆப்ஷன்: ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் டெஸ்ட்: மெனு – மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.
நேவிகேஷன் ஷார்ட்க்ட்: இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.
பிரவுஸர்: ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்.
- See more at: http://www.tamilserialtoday.com/2014/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/#sthash.vfC5vwgG.dpuf

ஆன்டிராய்டு போன் பயன்பாட்டில் பிரச்சனைக்கு தீர்வு....


 மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                     இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாமும் ஆன்டிராய்டு போனை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.ஆன்டிராய்டு போனில் பயன்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வது பற்றி பார்ப்போம். 




 (1) அடிக்கடி மெமரி பிரச்சினை வருகிறதா?


இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கேச்சி நிரம்பிவிடுவது தான், இதை சரி செய்ய ஆன்டிராய்டு சந்தையில் கேச்சி க்ளினர் என்ற ஆப் கிடைக்கின்றது. இந்த ஆப் இந்த பிரச்சனையை சரி செய்து விடும்.




(2)கேம்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறதா?
ஒவ்வொரு கேமும் ஒவ்வொரு வகையான கிராபிக்ஸை பயன்படுத்தும். இதனால் நீங்க போனை வாங்கும் முன் சோதனை செய்துகொள்வது அவசியம்.


(3)ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை முழுமையாக அழிக்க வேண்டுமா?
பாக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷன் இதற்கு சரியான தீர்வாக இருக்கும், இதை செட்டிங்ஸ் - எஸ்டி போன் ஸ்டோரேஜ் சென்று வேலையை முடித்து கொள்ளலாம்.

(4)போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்க போன் தவறி நீரில் விழுந்தால் முதலில் வேகமாக பேட்டரியை கழற்றி விட்டு, முடிந்த வரை எல்லா பாகங்களையும் காய வையுங்கள், 72 மணி நேரம் காய வைத்த பின் பயன்படுத்தலாம், இது வேலை செய்யலாம்.

(5)ஆன்டிராய்டு டேட்டாவை எப்படி நிறுத்துவது?
ஆன்டிராய்டு சந்தையில் கிடைக்கும் ஏபிஎன்டிராய்டு (APNdroid) ஆப் உங்க ஆன்டிராய்டு போனின் டேட்டாக்கள் அனைத்தையும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் சிறிய விட்ஜெட் மூலம் ஆஃப் செய்து விடும்.

(6)ஆன்டிராய்டு போன் ஜாம் ஆகுதா?
இது எல்லோருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை. இதற்கான எளிய தீர்வு உங்க போனை ஒரு முறை ரீசெட் செய்தால் போதுமானது.

(7)பதிவிறக்கம் செய்யும் போது பிரச்சனையா?
சில ஆன்டிராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு காரணம் ஆன்டிராய்டில் சில ஆப்கள் அதிக ரெசல்யூஷனை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

(8)வைபை கனெக்ட் ஆனதை காட்டவில்லையா?
வயர்லெஸ் நெட்வர்க்ஸ் - வைபை செட்டிங்ஸ் சென்று மெனு பட்டனை அழுத்துங்கள், அங்கு அட்வான்ஸ்டு ஆப்ஷனை தெரிவு செய்து ஸ்லீப் பாலிசியில் நெவர் ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.

(9)டேட்டா பயன்பாட்டை கண்காணிப்பது எப்படி?
மை டேட்டா மேனேஜர் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். இந்த ஆப் நீங்க பயன்படுத்தும் டேட்டாக்களின் விவரங்களை சூப்பராக பட்டியலிடும்.

(10)கீபோர்டு பயன்படுத்த கடினமாக இருக்கிறதா?
இந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருக்கின்றது. இதன் எடுத்துக்காட்டுத்தான் ஸ்லைடு, இதன் மூலம் டைப்பிங் எளிதாக முடிந்து விடும்.

(11)எஸ்டி கார்டு பிரச்சனையா?
ஆன்டிராய்டில் கூடுதல் மெமரி கார்டு உபயோகிக்கும் போது அது வேலை செய்யவில்லை எனில் அந்த கார்டை கணினியில் போட்டு ரீபார்மேட் செய்யுங்கள்.

(12)சூரிய வெளிச்சத்தில் ஸ்கிரீனை பார்க்க முடியவில்லையா?
இதற்கு சரியான தீர்வு ஆன்டி கிளேர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர், இது சூரிய வெளிச்சத்திலும் ஸ்கிரீனை பார்க்க முடியும்.

(13)ஆப்ஸ்களை டெலீட் செய்வது எப்படி?
செட்டிங்ஸ் - அப்ளிகேஷன்ஸ் - மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

(14)ஸ்கிரீன் க்ராக் ஆனால் என்ன செய்ய வேண்டும்?
சில பிரபலமான போன்களுக்கான பாகங்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கின்றன, இல்லாத சமயத்தில் நீங்க அலசி ஆராய்ந்து ஸ்கிரீனை மாற்றுங்கள்.

(15)பாஸ்வார்டு என்டர் செய்ய நீண்ட நேரம் ஆகிறதா?
செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - செட் அப் ஸ்கிரீன் லாக் தெரிவு செய்து பேட்டர்ன் பாஸ்வார்டு கொடுங்கள்.

(16)மேப்களில் லொகேஷன் சரியாக காட்ட வில்லையா?
செட்டிங்ஸ் - லொகேஷன் - யூஸ் ஜிபிஎஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள்.

(17)ட்ச் ஸ்கிரீன்
ஒவ்வொரு சமயம் நமது டச் ஸ்கிரீன் நமக்கு உச்ச கட்ட பிரச்சனையை தரும். அப்போது ரீசெட் செய்து பாருங்கள்.

(18)ப்ளாஷிங் எல்ஈடி
உங்களுக்கு இது பிடிக்கவில்லை எனில் செட்டிங்ஸ் - டிஸ்ப்ளே - நோட்டிப்பிக்கேஷன் ப்ளாஷ் சென்று எல்லா டிக் மார்க்களையும் எடுத்து விடுங்கள்.