செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தமிழ்நெட்'99 முறை தட்டச்சு செய்யுங்க..

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க.. 

     கணினியில்  தமிழ்  தட்டச்சு செய்வதற்காக நம்மவர்கள் தற்போது  
தமிழ் தட்டச்சுமுறை விசைப்பலகை, வானவில் விசைப்பலகை , பாமினி விசைப்பலகை, இளங்கோ தமிழ் விசைப்பலகை, தமிழ் மாடுலர் விசைப்பலகை, சிங்கப்பூர் விசைப்பலகை, மயிலை விசைப்பலகை, தமிழ்நெட்'99முறை விசைப்பலகை ,என பல வடிவங்களில் தட்டச்சு முறையிலும்,ஒலிப்பியல் முறையிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கூடுதலாக தமிங்கிலம் முறை,ஒலிப்பெயர்ப்பு முறை என தமிழில் புதியவர்களை குழப்பும் வண்ணம் பலவித முறைகளை அவரவர் விருப்பம் போல பயன்படுத்தப்படுவதால் புதியவர்கள் பயந்து தமிழில் தட்டச்சு செய்யும் வேலையே வேண்டாம் என முடிவு எடுத்துவிடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி தமிழ் எழுதவும்,படிக்கவும் மட்டுமே தெரிந்த தமிழார்வலர்களுக்கும் ,இருபால் ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.கணினியில் ஆங்கில எழுத்து தட்டச்சும் முறை ஏற்கனவே நமக்குத்தெரியும் அல்லவா!,கணினி விசைப்பலகையை தமிழ்'99 முறைக்கு மாற்றினால்  ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் என்ன தமிழ் எழுத்துக்கள் பதிந்துள்ளன என அறிந்துகொள்வோம்.

 தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ள தமிழ் நெட்'99முறையை  தட்டச்சு செய்ய பயன்படுத்துங்க.

தமிழ்'99 முறை  ஒலிப்பியல் முறையாகும்.
ஒலிப்பியல் என்றால் என்னங்க?
அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்க..
 நம் பேச்சு முறைதாங்க ஒலிப்பியல் முறை. அதாவது உச்சரிக்கும் அனைத்து  வார்த்தைகளும் எழுத்துக்களாக எழுதலாம்.அவ்வாறு எழுதும் எழுத்துக்களை உச்சரிக்கும்போது மெய்யெழுத்து +உயிரெழுத்து என இரண்டும் சேர்ந்து ஒலிப்பதை உணர்வீர்கள்.அதாவது உயிர்மெய் எழுத்துக்கள் என 247எழுத்துக்களையும் நிதானத்துடன் மெதுவாக உச்சரித்துப்பாருங்கள் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும் மெய்யெழுத்தாகவும்,உயிரெழுத்தாகவும் பிரித்து உச்சரிக்கப்படுவதை உணரலாம்.அந்த முறைதாங்க ஒலிப்பியல் முறை...
எழுத்தியல் முறை என்றால் என்னங்க? எழுத்தியல் முறையைப்பற்றி தெரிந்துகொள்வீர்களேயானால் ஒலிப்பியல் முறை பற்றி எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

            உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளையும் எழுத்துக்களாக எழுதும்போது அவைகளுக்கு வரி வடிவம் கொடுப்பதை கவனியுங்கள்.  கோபி என்று உச்சரிப்பதை  எழுதும்போது  கோ என்ற முதலெழுத்தை மூன்று பிரிவுகாக பிரித்து எழுதுகிறீர்கள்,அடுத்து பி என்ற எழுத்தை இரு பிரிவுகளாக பிரித்து எழுதுகிறீர்கள். அதுபோல

         ஒலிப்பியல் முறையில் உதாரணமாக  'கோபி' என்ற ஊரை ஒலிக்கும்போது அதே சிந்தனையில் 'கோபி' என்ற வார்த்தைக்கான மெய்யெழுத்து உள்ள விசையையும்,உயிரெழுத்து உள்ள விசையையும் தட்டினால்  போதுமானது. அதாவது 'க் ஓ ப் இ' என்று  மெய்யெழுத்து உயிரெழுத்து என மாறி மாறி தட்டச்சினால் கணினி தானாக எழுத்துக்களை சேர்த்து  'கோபி' என உயிர் மெய் எழுத்துக்களாக பதிவு செய்துவிடும்.

        இன்னும் சுருக்கமாக  புரிந்துகொள்ள வேண்டுமானால்  தமிழ் எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்,மெய்யெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் என எழுதி படிக்கிறோம் அல்லவா! அதே முறையில் தமிழ்'99 முறையினையும் பயன்படுத்துங்க.

அதாவது, 
(1) மெய்யெழுத்துக்கள் பெற சாதாரணமாக கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை தட்டச்சினால் போதுமானது.
 h  க      (அதாவது  h அழுத்தினால் க எழுத்து பதிவாகும்).
ங      (அதாவது b அழுத்தினால் ங எழுத்து பதிவாகும்).
 [  ச      (அதாவது  [ அழுத்தினால்  ச எழுத்து பதிவாகும்).
 ]  ஞ    (அதாவது ] அழுத்தினால்  ஞ எழுத்து பதிவாகும்).
 o  ட    (அதாவது o அழுத்தினால்  ட எழுத்து பதிவாகும்).
 p     (அதாவது p அழுத்தினால்  ண எழுத்து பதிவாகும்).
 l   த     (அதாவது  l அழுத்தினால்  த எழுத்து பதிவாகும்).
;         (அதாவது ; அழுத்தினால் ந எழுத்து பதிவாகும்).
 j        (அதாவது  j அழுத்தினால்  ப எழுத்து பதிவாகும்).
 k        (அதாவது k அழுத்தினால்  ம எழுத்து பதிவாகும்).
 '       (அதாவது  ' அழுத்தினால்  ய எழுத்து பதிவாகும்).
ர        (அதாவது m அழுத்தினால்  ர எழுத்து பதிவாகும்).
        (அதாவது n அழுத்தினால்  ல எழுத்து பதிவாகும்).
 v  வ    ( அதாவது v அழுத்தினால்  வ எழுத்து பதிவாகும்).  
 /        (அதாவது  / அழுத்தினால்  ழ எழுத்து பதிவாகும்).
       ( அதாவது y அழுத்தினால் ள எழுத்து பதிவாகும்).
 u       (அதாவது  u அழுத்தினால்  ற எழுத்து பதிவாகும்).
 i      (அதாவது  i அழுத்தினால்  ன எழுத்து பதிவாகும்).
 மேற்கண்ட பதினெட்டு ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக  தட்டச்சினால் (ஷிப்ட் கீ எனப்படும் தூக்குவிசை அழுத்தாமல் ) அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது அகரமேறிய மெய்யெழுத்துக்களாக பதினெட்டும் பதிவாகும்.
 (அகரம் ஏறிய என்றால் உயிர்மெய் எழுத்துக்களாக பதியும்.தூய மெய்யெழுத்துக்கள் பெற வேண்டுமானால் கூடவே f எழுத்தை தட்டச்சுங்க புள்ளி வைத்துக்கொள்ளும். புரியவில்லை என்றால் நேரில் பயிற்சியின்போது தெளிவு பெறுங்கள்)
==================================================================
(2) கீழ் கண்டுள்ள  வடமொழி எழுத்துக்களுக்கு மட்டும்SHIFT KEY என்னும்  தூக்கு விசை பயன்படுத்த வேண்டும்.நாம் பயன்பாட்டில் தூக்குவிசை அழுத்தி கேப்பிட்டல் ஆங்கில எழுத்து  பதிவிடுவோம் ஆதலால்  தூக்குவிசை SHIFT KEY அழுத்திக்கொண்டு என்று சொல்வதைவிட கேப்பிட்டல் எழுத்தாக பதிவிடுவோம் என்று சொல்வோம்)
ஸ  அதாவது
  Q என கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ எழுத்து பதிவாகும்.

W ஷ   அதாவது 
    W கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஷ எழுத்து பதிவாகும்.

E  ஜ    அதாவது  
    E கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஜ எழுத்து பதிவாகும்.

R ஹ  அதாவது 
    R கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஹ எழுத்து பதிவாகும்

T க்ஷ அதாவது  
 T கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் க்ஷ எழுத்து பதிவாகும்

ஸ்ரீ அதாவது
  Y கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ்ரீ எழுத்து பதிவாகும்.

தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்திக் கொண்டே  மேற்கண்ட  ஆங்கில எழுத்துக்களைஅழுத்தினால் எதிரில்  உள்ள வடமொழி எழுத்துக்கள் பதிவாகும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர் என நினைக்கிறேன்..
=====================================================================
(3) உயிர் எழுத்துக்கள் 12 ம் பெற  கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.அதாவது  a அழுத்தினால் அ உயிர் எழுத்து கிடைக்கும் இவ்வாறாக அனைத்து உயிர் எழுத்துக்களும் பெறலாம்.
 a  அ   (அதாவது a விசையை அழுத்தினால் அ பதிவாகும்).
ஆ    (அதாவது q விசையை அழுத்தினால் ஆ பதிவாகும்).
இ     (அதாவது s விசையை அழுத்தினால் இ பதிவாகும்).
ஈ    (அதாவது w விசையை அழுத்தினால் ஈ பதிவாகும்).
d  உ      (அதாவது d விசையை அழுத்தினால் உ பதிவாகும்).
    (அதாவது e விசையை அழுத்தினால் ஊ பதிவாகும்).
எ     (அதாவது g விசையை அழுத்தினால் எ பதிவாகும்).
       (அதாவது t விசையை அழுத்தினால் ஏ பதிவாகும்).
       (அதாவது r விசையை அழுத்தினால் ஐ பதிவாகும்).
     (அதாவது c விசையை அழுத்தினால் ஒ பதிவாகும்).
ஓ      (அதாவது x விசையை அழுத்தினால் ஓ பதிவாகும்).
ஔ   (அதாவது z விசையை அழுத்தினால் ஔ பதிவாகும்).
f  ஃ   (அதாவது f விசையை அழுத்தினால் ஃ பதிவாகும்.
   அதே நேரத்தில்  h க - போன்ற அகரமேறிய மெய்யெழுத்தை அழுத்திவிட்டு பிறகு f அழுத்தினால் 'க் ' போன்ற தூய மெய்யெழுத்தாக பதியும்.  ).

மேற்கண்ட பன்னிரண்டு ஆங்கில எழுத்துக்களை தூக்குவிசை என்னும் ஷிப்ட் கீ அழுத்தாமல் சாதாரணமாக  தட்டச்சினால் அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் பதிவாகும். கவனியுங்க இங்கு  f எழுத்து மட்டும் தனியாக தட்டச்சினால் ஃ ஆகவும், அகரம் ஏறிய மெய்யெழுத்து தட்டச்சியபிறகு f எழுத்தை தட்டச்சினால் புள்ளி வைத்து அதாவது தூய மெய்யெழுத்தாக பதியும்.
======================================================================
(4) தமிழ் எழுத்துக்கள் 247 எழுத்துக்களையும் பெற மேற்கண்டவாறு  மெய் எழுத்துக்கள் 18 மற்றும் உயிர் எழுத்துக்கள் 12 ஆக முப்பது எழுத்துக்களைக் கொண்டு தூக்குவிசை அழுத்தாமல் சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.முப்பது எழுத்துக்களை தட்டச்சும்போது கணினி புரிந்துகொண்டு மெய் எழுத்தையும் உயிரெழுத்தையும் தானாக சேர்த்துக்கொண்டு  நமக்கு 247 உயிர்மெய் எழுத்துக்களையும் கொடுக்கும்.
மிக எளிதானது ஒருமுறை பயன்படுத்திப்பாருங்க.இத்தனை காலம் வீணாகிவிட்டதாக வருத்தப்படுவீங்க.அத்தனை எளிதானதுங்க.
=========================================================================
நாம் தட்டச்சு செய்யும் ஆங்கில எழுத்து விசைப்பட்டனும் தமிழுக்குரிய  மெய் எழுத்துக்களும்,உயிர் எழுத்துக்களும் இரண்டையும் தொடர்ந்தாற்போல தட்டச்சும்போது அவைகளுக்கேற்ப உயிர் மெய் எழுத்துக்களாக மாற்றமடைந்து பதியும் எழுத்துக்களும் இனி கவனியுங்க.....
 a q s w d e g t r c x z f   இவைகள் முறையே அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ ஆகிய எழுத்துக்களாகப்  பதிவாகும் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

 h b [ ] o p l ; j k ' m n v / y u i இவைகள் முறையே க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ஆகிய எழுத்துக்களாகப் பதிவாகும் என்பதையும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
அதாவது மெய் மற்றும் உயிர் எழுத்துக்களுக்கான இந்த முப்பது விசைகளையும் நன்கு அறிந்துகொண்டாலே போதுமானது.

உதாரணமாக
க       எழுத்து பெற ha என இருவிசைகளை அழுத்துங்க . 
கா     எழுத்து பெற hq என இருவிசைகளை அழுத்துங்க. 
கி       எழுத்து பெற hs என இரு விசைகளை அழுத்துங்க.
கீ       எழுத்து பெற hw  என இருவிசைகளை அழுத்துங்க. 
கு       எழுத்து பெற hd  என இருவிசைகளை அழுத்துங்க.
கூ       எழுத்து பெற he  என இருவிசைகளை அழுத்துங்க. 
கெ      எழுத்து பெற hg  என இருவிசைகளை அழுத்துங்க. 
கே      எழுத்து பெற ht  என இருவிசைகளை அழுத்துங்க. 
கை       எழுத்து பெற hr  என இருவிசைகளை அழுத்துங்க. 
கொ     எழுத்து பெற hc  என இருவிசைகளை அழுத்துங்க. 
கோ     எழுத்து பெற hx  என இருவிசைகளை அழுத்துங்க. 
கௌ     எழுத்து பெற hz  என இருவிசைகளை அழுத்துங்க. 
க்       எழுத்து பெற hf  என இருவிசைகளை அழுத்துங்க.

இவ்வாறாக உயிர்மெய் எழுத்துக்களைப் பெற இருவிசைகளை பயன்படுத்த வேண்டும்.உயிர் எழுத்து மட்டும் மற்றும் மெய்யெழுத்து மட்டும் பெற அதற்குரிய ஒருவிசை மட்டும் அழுத்தினால் போதும்.

       மறவாதீங்க சாதாரணமாக தட்டச்சு மட்டுமே செய்து மேற்கண்ட முப்பது எழுத்துக்களையும் பதிவிடலாம்.

            சரி,இனி வடமொழி எழுத்துக்களையும் தமிழில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்.அப்படியானால் குறைந்த அளவே பயன்படும் இந்த வடமொழி எழுத்துக்களை பதிவிடுவது எப்படி? என சந்தேகம் வரலாம்!.. இதோ நாம் வடமொழி எழுத்துக்களான ஸ ஷ ஜ ஹ ஸ்ரீ  இந்த ஐந்து எழுத்துக்களை மட்டுமே  எப்போதாவது பயன்படுத்துகிறோம்.இந்த ஐந்து எழுத்துக்களும் பதிவு செய்ய மட்டும் Q,W,E,R,T,Y, என்ற எழுத்துக்களை அதாவது கேப்பிட்டல் எழுத்துக்கள் பெறுவதற்காக பயன்படுத்தும் தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்த வேண்டும். இரண்டு நாட்களிலேயே இவை அனைத்தும் பழக்கத்திற்கு வந்துவிடும்.
அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க..

 தமிழுக்கு தொண்டு செய்வோம் தரணியில் தமிழுக்கு உயர்வு அளிப்போம்.
 என அன்புடன், 
C.பரமேஸ்வரன், 
சத்தியமங்கலம், 
ஈரோடு மாவட்டம் - 638402


திங்கள், 14 செப்டம்பர், 2015

மின்-தமிழ் இலக்கியப்போட்டிகள் நம்ம புதுக்கோட்டையில்-2015

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். வருகிற 2015செப்டெம்பர்30ந் தேதிக்குள் உங்க படைப்புகளை அனுப்புங்க.பரிசும் பாராட்டும் காத்திருக்கிறதுங்க..நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை எழுதி அனுப்புகிறேன்...வெற்றி என்பதல்லங்க முக்கியம்..புதுகை விழாக்குழு  நண்பர்களுக்கு ஊக்கம் தருவதே முக்கியம். தன்னலம் கருதாமல் தமிழ்ச்சமூக வளர்ச்சி மற்றும் தமிழ் விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம் வாங்க...வருகிற 2015அக்டோபர் 11 ந்தேதி புதுக்கோட்டையில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015: உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -  “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய  மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் ....

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -
                                மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  
            கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி- 
              கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) 
                    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
           சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3)     
            பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - 
       பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 

வகை-(4)  
                     புதுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5)   
                   மரபுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம். 

      மிகச்சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் தமிழுக்காக இணையத் தமிழுக்காக அயராது மாதக்கணக்கில் செய்து வரும் நண்பர் திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மற்றும் விழாக்குழுவினரை வலைத்தமிழுலகம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்..
 என
அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-638402
ஈரோடு மாவட்டம்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தொல்காப்பிய மன்றம் பாரீஸ் நகரில் உதயம்.

தொல்காப்பிய மன்றம் என்னும் பன்னாட்டு அமைப்பு 
                           பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உதயம்-2015

     உலக தொல்காப்பிய மன்றத்தை    tolkappiyam@gmail.com  
                                      என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்புகளை உலகெங்கும் பரப்ப தொல்காப்பிய மன்றம் என்னும் புதிய அமைப்பு சமகால தமிழ்ச்சான்றோர்களால் துவக்கப்பட உள்ளது.நமது எல்லோருக்கும் பெருமை.. செய்தி வெளியிட்ட 2015ஆகஸ்டு 23 ந் தேதியிட்ட தி இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றிங்க..

பேராசிரியர் மு.இளங்கோவன்
பேராசிரியர் மு.இளங்கோவன்
             தொன்மைமிகு தொல்காப்பியத் தின் சிறப்புகளை உலகெங்கும் பரப்புவதற்காக ’தொல்காப்பிய மன்றம்’ என்ற அமைப்பு பாரீஸில் அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 27-ம் தேதி தொடங்கப்படுகிறது.
தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு மழவை மகாலிங்க ஐயர் முதன் முதலில் மாற்றினார்.
அமைப்பு ரீதியாக..
                 தமிழின் சிறப்புகளைச் சொல் லும் தொல்காப்பியம் குறித்து தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு இன்னமும் சரியான புரிதல் இல்லை. திருக் குறள், சிலப்பதிகாரம், கம்பராமா யணம் அளவுக்கு அமைப்புரீதி யாக தொல்காப்பியம் பிரபலப்படுத் தப்படவில்லை. இந்தக் குறையை போக்குவதற்காகவே அடுத்த மாதம் லண்டனில் ’தொல்காப்பிய மன்றம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.இதன் முன்னோட்டமாக, 
 தொல்காப்பிய மன்றத்தின் இணையதள முகவரி தொடக்க விழா புதுச்சேரியில் நடைபெற்றது. 

               தொல்காப்பிய மன்றத்தின் இந்திய பொறுப்பாளராக புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

             அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ் இலக்கண பெருமை சொல் லும் தொல்காப்பியத்தின் மகத்துவம் தமிழர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. தொல்காப்பியத்தை வலைத்தளத்தில் பதிவேற்றி அனைவரும் அதை எளிதில் படிக்க வேண்டும் என்பதற்காக, ஓலைச் சுவடியில் இருந்த தொல்காப்பியத்தையும் அதன் பிற பதிப்புகளையும் டிஜிட்டலைஸ்டு செய்து வைத்திருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் 
                         நான் கலந்து கொண்ட கருத்தரங்கில் சிவச்சந்திரன் என்ற பெரியவர் துண்டறிக்கை ஒன்றை விநியோகம் செய்தார். அதில் தொல்காப்பியத்தின் நான்கைந்து நூற்பாக்கள் அச்சிடப்பட்டிருந்தன. விசாரித்ததில், ’தொல்காப்பியத்தை அனைவரிடமும் கொண்டு செல் வதற்காக இப்படிச் செய்கிறேன்’ என்றார் பெரியவர்.

            அவரது வீட்டில் இருந்த தொல்காப்பியம் சம்பந்தப்பட்ட நூல்களைப் பார்த்து விட்டு பிரமித்துப் போய்விட்டேன். தொல்காப்பிய மன்றம் தொடங்கும் யோசனை அங்குதான் உதித்தது.

                    தொல்காப்பிய கருத்துக்களை எளிமையான வடிவில் சாமானியர் களிடமும் தமிழே படிக்காத பொறி யாளர்கள், மருத்துவர்கள் உள்ளி டோரிடமும் கொண்டு சேர்ப்பதும் தான் இந்த மன்றத்தின் முக்கிய நோக்கம். இதில் தமிழறிந்த அனை வரும் இணையலாம்.

             பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்த பன்னாட்டு அமைப்பின் தொடக்க விழா பாரீஸில் வரும் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணை நின்றவர்களையும் அறிஞர் குழு அடையாளம் கண்டு ஆண்டு தோறும் அவர்களுக்கு மலேசிய தொல் காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது பெயரில் விருது வழங்கப்படும்.
 
மூதறிஞர் குழு
               பொற்கோ (சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்), பேராசிரியர் கு.சிவமணி, பேராசிரி யர் அ.சண்முகதாஸ் (இலங்கை), இ.பாலசுந்தரம் (கனடா), சுப. திண் ணப்பன் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் சித்தார்த்தன், ம.மன்னர் மன்னன் (மலேசியா), பேராசிரியர் இ. மறை மலை, ஜீன் லாக் செவ்வியார் (பிரான்சு), சு. அழகேசன், புலவர் பொ.வேல்சாமி, சு. சிவச்சந்திரன் (லண்டன்) ஆகியோர் இந்த மன்றத்தின் மூதறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்.

              தொடக்க விழாவின்போது, முதல் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி அரேபிய நாடுகளின் பேராசிரி யர்கள் பங்கேற்று கலந்துரையாடு கின்றனர். 

         உலக தொல்காப்பிய மன்றத்தை 
 tolkappiyam@gmail.com 
             என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

                     உலக அளவிலான மன்ற பொறுப்பாளர்களாக கி.பாரதிதா சன் (பிரான்ஸ்), மு.இளங்கோவன் (இந்தியா), ஆம்பூர் மணியரசன் (ஜெர்மனி), ஹரிஷ் (இங்கிலாந்து), சந்தன்ராஜ் (சிங்கப்பூர்), வாணன் மாரியப்பன் (மலேசியா), அர வணைப்பு கு.இளங்கோவன் (குவைத்), பழமலை கிருஷ்ண மூர்த்தி (குவைத்), த.சிவபாலு (கனடா), சுரேஷ் பாரதி (சவுதி), அருள் பாலாசி வேலு (தைவான்), அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா), தி.நா.கிருஷ்ண மூர்த்தி (அந்தமான்) ஆகியோர் செயல்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

google science forum -கூகுள் அறிவியல் இயக்கம்- சத்தியமங்கலம்.

          எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
                                                                                 -திருக்குறள் 110    


              எங்களுடன் இணையுங்க,தங்களுடைய ஆதரவைக்கொடுங்க....
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். கூகுள் நிறுவனத்தின் அளப்பரிய இலவச சேவைகளினால் இன்றைய காலத்தில் கடைநிலையிலுள்ள  சாதாரண மனிதனும் கணினி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை கற்கவும்,பயன்படுத்தவும் முடிந்தது.
          இதன் தொடர்ச்சியாக -
இருபால் மாணவர்கள், இளைய சமூகம்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்  
           கணினி மற்றும் மொபைல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு போன்ற தகவல் தொடர்பு சார்ந்த பயனுள்ள பல விசயங்களை  INTERNET TAMIL FRIENDS SATHY - தமிழ் இணையதள நண்பர்கள் என்ற பெயரில் செயல்பட்ட வலைப்பதிவின் பெயரை 2015 ஆகஸ்டு 8ந் தேதி இன்று முதல்
'' GOOGLE SCIENCE FORUM-கூகுள் அறிவியல் இயக்கம்'' 
           என்று பெயர் மாற்றப்பட்டு சமூகநலனுக்கான தகவல்களை வெளியிட்டும் , இயக்கங்கள் நடத்தியும் கூகுள் நிறுவனத்திற்கு நன்றி செலுத்த உள்ளோம். 
       இந்த தளத்தில் தாங்களும் இணைந்துகொண்டு  மேலான ஆதரவையும் ஆலோசனைகளையும் கொடுத்து உதவுங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
சமூக நலன் கருதி 
உங்களது அன்பன் 
C.பரமேஸ்வரன்.செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
 (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
சத்தியமங்கலம் ,
ஈரோடு மாவட்டம். 
தமிழ்நாடு.638402
http://googlescienceforum.blogspot.com,
 http://consumerandroad.blogspot.com,
http://konguthendral.blogspot.com,
http://paramesdriver.blogspot.com.
E - MAIL paramesdriver@gmail.com


   இன்று வரை பார்வையிட்டவர்கள் 17616




திங்கள், 27 ஜூலை, 2015

இணையதளங்களினால் நன்மைகளும்,தீமைகளும்.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். இன்றைய சூழலில் இணையதளங்களினால் மனித சமூகத்திற்கு நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதற்கேற்ப ஏற்படுகின்றன.அதைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.

                   இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
                  உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
                  இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.


சில சமூக வலைதளங்கள்
                       பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும்  அதிகமாக உள்ளன. Facebook, Twitter, Linked in, My space, Ning, Google+, Tagged, Orkut, Hi5, My year book, Youtube, Flicker, Digg போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற Facebook மற்றும் Twitter ஆகியவை மிகவும் பிரபலமான வலைதளங்களாகும்.

                         கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ ?(Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட் போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் 24 மணி நேரமும் இருந்த இடத்திலிருந்தே சமூக வலைதளங்கலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு பார்வியிடலாம் என்பதுதான்.
தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளம் ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இதன் வாயிலாக புளுடூத் வசதி இல்லாமலேயே இணையத்தின் வழியாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், வாழ்த்துக்கள் என அனைத்தையும் பிறரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். நவீனத் தொழுல்நுட்பங்கள் கையடக்கத்தில் இருப்பதால் அனைவரின் பார்வையும் ஸ்மாட் போன்கள் மேல் திரும்பியுள்ளன.
இந்த வாட்ஸஅப்பை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு முகநூல் வாங்கியுள்ளது. ஏதேனும் ஒரு வகையில் மக்களைக் கவர்வதற்காகவே சமூக வலைதளங்கள் முயல்கின்றன. புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதே சமூக வலைதளங்களின் நோக்கமாகின்றன.
”வலைதளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை முகநூலில் 80 கோடியும் டிவிட்டரில் 20 கோடி, லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடியும், குருப் ஆன் தளத்தில் 11.5 கோடியும், கூகுள் பிளஸில் 9 கோடிபேரும் சீனைவைச் சார்ந்த சமூக வலைதளங்களான ரென்ரென் 17 கோடிபேரும், கியூஜோன் 50 கோடிபேரும், சீனா வைபோ 25 கோடிபேரையும் மற்றுமுள்ள பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.”
சமூக மாற்றம்
            மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் கேவலமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை கிண்டலும் கேலியும் செய்யப்படுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்மைகள்.
               சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் தருகின்றன.கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், உலக மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

உறவுகளுக்குப் பாலம்
            தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

வணிக வளர்ச்சி.
           வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

கருத்துப் பரிமாற்றம்
               பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

தீமைகள்
            சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஏமாற்று வேலைகள்
             அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

குற்றங்கள்
        சமூக வலைதளங்களின் உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலீசாருக்கு திண்டாட்டத்தை  ஏற்படுத்துகிறது.

அதிகப்பயன்பாட்டின் விளைவு.
          அலைபேசியில் 24 மணி நேரமும் சமூக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

                  பெருமளவில் மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயனர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். சிறுவர்களும் இளைய சமூகத்தினரும்தான் பெரும்பாலானவர்களாக இருந்து வருகின்றனர்.
           சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது” (tamil. Thehindu.com) என 27-10-2014 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” (http/ponseinilam.blogspot.in) என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது.

               இதுபோல பலவகையான குற்றங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமுக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமூக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆஹ்டிலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.


               இன்டர்நெட்டால் நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும், தீமைகள் பல்கிப் பெருகி, மனித குலத்தை மிரட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆன்லைன் வாயிலாக கிரடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கிக்கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக இணைய தளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுவது போன்ற சைபர் குற்றங்கள் நடக்கின்றன.
* சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இன்டர்நெட் மூலம் வர்த்தகம் செய்யும் போது, "ஹேக்கர்ஸ்' (இன்டர்நெட் திருடர்கள்), நமது ரகசிய எண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் பணம் பறிபோகலாம்.
* தேவையில்லாத இ-மெயில்கள் வரும். அதை "கிளிக்' செய்யும் போது, அது தவறான இணையதளத்துக்கு நம்மை கொண்டு செல்லும். அல்லது கம்ப்யூட்டருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* இன்டர்நெட்டின் பயன்பாடு காரணமாக, புதிய தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் தெரிந்து கொள்கின்றனர். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிறது.
* இளம் தலைமுறையினர், இன்டர்நெட்டை பயன்படுத்துவது, அக்னி பரீட்சை போல. ஏனெனில், தற்போது "ஆபாச' இணையதளங்கள் பெருகிவிட்டன. இவை இளம் தலைமுறையினரின் மனதை கெடுத்து விடும். சைபர் குற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
* கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது, வைரசால் கம்ப்யூட்டர் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முக்கியமான தகவல்கள் அழிந்து விடுகின்றன.
* இணையத்தில் சாட் செய்யும் போது, அறிமுகம் இல்லாதவரின் ஆசை வலையில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.

என்ன செய்ய வேண்டும்:
* இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
* முடிந்தளவு சமூக தளங்களில், தனிப்பட்ட விவரங்கள், போட்டோக்கள், வங்கி விவரங்கள், மொபைல் எண்கள், வீட்டு விலாசம் போன்றவற்றை வெளியிடாமல் தவிர்ப்பது நல்லது.
* ஆசை காட்டி வரும் மெயில்களை நம்பி, அந்த இணையதளங்களுக்குள் செல்லாதீர்கள்.
* "பல கோடி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்' என்று கவர்ச்சி காட்டும் மெயில்களில் குறிப்பிடப்படும், இணையதளங்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
* பெண்களின் பெயர்களில் செய்யப்படும் "சாட்டிங்', பெரும்பாலும் போலியாக இருக்கும். இதிலும் கவனம் தேவை.
* தொடர்ந்து இன்டர்நெட்டை பார்க்கும்போது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை விட்டு, வேறு பொருட்களை பார்த்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
* தினமும் கண்களை, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி செய்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்யுங்கள். கண்களில் பார்வை கோளாறு இருந்தால், உடனே கண்ணாடி அணியுங்கள். இல்லாவிட்டால், கோளாறு அதிகரிக்கும வாய்ப்பு உள்ளது.