ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மொபைல் போன் வழியாக ரயில் பயண முன்பதிவு !

மொபைல் போன் வழியாக ரயில் பயண முன்பதிவு !


இந்தியன் ரெயில்வேஸ் இப்பொழுது மூன்று புதிய சர்வர்களை நிறுவியுள்ளது.

ஆம் உங்கள் மொபைல் போன் மற்றும் கையைடக்க சாதனங்களில் இருந்து நீங்கள் உங்களது புக்கிங்கை மேற்கொள்ளலாம். 


இதில் என்ன புதிது என கேட்பவர்களுக்கு.....

 இது வரை வெப்சைட்டில் மட்டுமே ரிஸர்வேஷன் செய்ய இயலும் நீங்கள் மொபைல் போனில் ரிஸ்ர்வ் செய்ய முனைந்தால் அது பேஜை சரியாக காட்டாது. அது போக அந்த சைட் (https ) வேறு மாதிரி அதனால் அந்த பாக்கெட் அக்னாலட்ஜ்மென்ட் வேறு மாதிரி. 

இது மொபைல் போன்களுக்காகவே செய்யபட்ட டிசைன் மற்றும் இதற்கென இப்போது தனி சர்வர்கள் நிறுவப் பட்டுள்ளன. 

முன்பதிவு செய்த டிக்கட்டை புக் மார்க் செய்து கொண்டால் பயணிக்கும் போது அப்படியே காட்டலாம் இல்லயெனில் லாகின் செய்து காட்ட ஈஸி.... 
தயவு செய்து பகிரவும்..... 

IRCTC launches a smarter way to book tickets. Now book your rail ticket -ANYWHERE ANYTIME through your Mobile Phones.IRCTC brings to you the mobile websitehttps://www.irctc.co.in/mobile with just a few clicks you can book your tickets using your Mobile Phones. IRCTC mobile website is convenient and easy to use, can be accessed from any browser enabled mobile having basic GPRS activated on phone.

The following features are available:

Book Ticket/ Enquiry - Book tickets by providing source and destination.

Booked History - Tickets whose Date of Journey is due will be visible.

Cancel Ticket - Cancel any of the tickets whose date of journey is due. 

Browse the URL using your mobile and book tickets using any of your credit/debit card for payment. 

Help for booking

1. Login to URL with your existing IRCTC user id and password.
2. Fill in details for plan my travel.
3. Select the train and continue the booking.
4. Use existing passenger list on add passengers.
5. Confirm booking details and pay through Credit/debit card to get successful booking.

ஜெய்ப்பூர்-NCSC-2011

































தவளை..!

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

by Mohana Somasundram on Saturday, January 14, 2012 at 11:15pm

 
   உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
      அமெரிக்க  ஐக்கிய நாட்டு  விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த  கிரிஸ்  ஆஸ்டின்  என்ற  விஞ்ஞானி , சமீபத்தில்  நியூகினியாவில் இரண்டு   புதிய  இனங்களைச்  சேர்ந்த  தவளைக் கண்டுபிடித்துள்ளார்.  எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா  ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள   இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான   நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழுவினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும்.
         
  இம்மாத்தூண்டு  தவளையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோபைரினி அமானூன்சிஸ்(Paedophryne amauensis)  என்பதாகும் .இதன் ஆண்  தவளையின்  கீச்சிடும்  ஒலி , ஒரு பூச்சியின்  ஒலியைப்  போலிருக்குமாம் . அதன்  மூலம்தான்  இந்த தவளையைக் கண்டுபிடித்தோம்  என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால்  இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம நாள் வெளியிடப்பட்டது.
   அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின்  பெயர் பீடோபைரினி  ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால்  அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா  ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார்  . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தென்னிந்திய அறிவியல் பயிற்சி முகாம் புதுவையில்- ஜனவரி 2012


          

                               அன்பு நண்பர்களே,
             tnsfsathy.blogspot.com  வலைப்பதிவு காண வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.
         கடந்த 17-ந்தேதி 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி-அதாவது ஜனவரி2012-ல் புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் புது டெல்லி-விஞ்ஞான் பிரச்சார் சார்பாக நடத்தப்பட்ட  புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சிப் பயிலரங்கத்தின் கண்ணோட்டம் பற்றி சிறிது இங்கு காண்போம்.

            அறிவியல் பயிற்சிப்பட்டறையின்  விழாப் பெயர்ப் பலகையின் தோற்றம் இது மேலே உள்ள படம்.


              புதுவை அறிவியல் இயக்கம், புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்புடன் இணைந்து நடத்திய புதுமையான எளிய அறிவியல் செய்முறைப்பயிற்சி பயிலரங்கு நடைபெற்ற பள்ளியின் முகப்பு அறைத்தோற்றம் மேலே உள்ள படம்.(கர்நாடக மாநில நண்பர்(KSF),தமிழ்நாடு மாநில நண்பர்(TNSF),புதுவை மாநில நண்பர்(PSF) ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்ற காட்சியுடன்.)      
 

     
            புதுடெல்லி விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் நிர்வாகி திருமிகு.T.V.வெங்கடேஷ்வரன் அவர்கள் அறிவியல் செய்முறைப் பயிலரங்கத்தினைத் துவக்கி வைத்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.ஸ்ரீதரன் அவர்கள்,திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்கள்,திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள்,திருமிகு.S.சீனிவாசன் அவர்கள்.

       
               புதுவை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.P.ரகுநாத் அவர்கள் பயிலரங்கத் துவக்கத்தின்போது இந்தப் பயிற்சிப்பட்டறையின் அவசியத்தை எடுத்துரைத்த காட்சி மேலே உள்ள படம்.



             எளிதில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு செய்யும் அறிவியல் பயிற்சியின் எளிமை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்குகிறார் பிரான்ஸ் நாட்டின் ஒடிசா பாரீஸ் சௌத்-11 பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமிகு.பியர் பான்த்ஸ் (ஓய்வு) அவர்கள் மேலே உள்ள படம்.



     

             புதுவை அறிவியல் இயக்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான திருமிகு.A.ஹேமாவதி அவர்களது உரையில்  பயிற்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தென்னிந்திய வட்டார அறிவியல் ஆர்வலர்கள் உட்பட அனைவரும் இந்த வாய்ப்பினை அனைத்து எளிய மக்களுக்கும்,மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்ட  காட்சி மேலே உள்ள படம்.


திருமிகு.பேரா.பியர் பான்த்ஸ் அவர்கள்  அறிவியல் செய்முறை விளக்கம் கொடுத்த காட்சி மேலே உள்ள படம்.



திருமிகு.பியர் பான்த்ஸ் அவர்களதுஅறிவியல் விளக்கத்திற்கான  பிரெஞ்ச் மொழியின்  உரையினை, புதுவையில் உள்ள பிரெஞ்ச் பள்ளி இயற்பியல் ஆசிரியர் அவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிவியல் இயக்க நண்பர்களுக்காக மொழி பெயர்த்து விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

            ஆந்திரா மாநில அறிவியல் இயக்க ஆசிரியப்பெருமக்கள் அறிவியல் விளக்கத்தினை ஏற்கும் காட்சி மேலே உள்ள படம்.


       கர்நாடகா மாநில அறிவியல் இயக்க அமைப்பாளர் அவர்கள் அறிவியல் செய்முறை விளக்கத்தினை சோதித்து தெளிவு பெறும் காட்சி.அதனை நோக்குபவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையத்தினைச் சேர்ந்த ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.

           கேரளா மாநில அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர்கள் அறிவியல் செய்முறைகளைப் பரிசோதிக்கும் காட்சி மேலே உள்ள படம்.



      தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்க நண்பர் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் ஈரோடு மாவட்ட தாளவாடி மையம்-பள்ளி ஆசிரியர் அறிவியல் பரிசோதனை செய்து பார்க்கும் காட்சி மேலே உள்ள படம்.



அறிவியல் பரிசோதனை எல்லாம் கடைகளில் கிடைக்கும் சோப்பு ஆயில் மற்றும் தண்ணீரிலும் செய்யலாங்க! என்கின்றனர்,கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் மேலே உள்ள படம்.


  ஆந்திர மாநில அறிவியல் இயக்க ஆசிரியர் சந்தேகத்திற்கான விளக்கம் பெற அந்த விளக்கம் தனக்கும் தேவை என்ற நோக்கில் அருகில் ஆர்வமுடன் கேட்டறிகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி ஆசிரியர் அவர்கள் மேலே உள்ள படம்.



           கர்நாடகா அறிவியல் இயக்க நண்பர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் தங்கிஇருந்த விடுதிக்கு வந்து உடன் ஊக்கமும் உற்சாகமும் அளித்த ஆசிரியர் திருமிகு.விசாகன்-புதுச்சேரி, அவர்கள் மேலே உள்ள படம்.
       
The Alliance Francaise Of  Pondicherry வழங்கிய பொங்கல் திருவிழா 18-ந்தேதி இரவு 7-00மணிக்கு கடற்கரை அருகில் உள்ள  Maison Colombani -இல் நடந்த Clowns Sans Frontieres circus என்னும்  கலை நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்துகொண்டு இன்புற்ற காட்சி மேலே உள்ள படம். (இந்நிகழ்ச்சியினைக் கண்டுகளிக்க உதவிய புதுச்சேரி ஆசிரியர் திருமிகு. விசாகன் அவர்களுக்கு நன்றி!)
           கீழே உள்ள படத்தின் வலது கடைசியில் உள்ளவர் திருமிகு.விசாகன் புதுச்சேரி ஆசிரியர் அவர்கள் அவர்தம் வாரிசுடன்.!!!


   
                அன்பு நண்பர்களே,வணக்கம்.


              புதுவை அறிவியல் இயக்கம் மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார அமைப்பு என்னும் அறிவியல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து கடந்த 17,18 & 19 ஜனவரி-2012 ஆகிய மூன்று நாட்கள்

          புதுச்சேரி, கண்ணன் நகரில் அமைந்துள்ள கோவிந்தபிள்ளை வீதியில் செயல்படும்- வெற்றி வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் மேல்தளத்தில் அமைந்துள்ள
     
          வெற்றி வெங்கடேஷ்வரா ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில்-

           நூதன எளிய அறிவியல் செய்முறைப் பயிலரங்கு  நடத்தியது.இங்கு மூன்று நாட்களும் சுமார் 15+22+31 என 68-க்கும் அதிகமான அறிவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. சிறு கிராமத்தில் எளிமையாகக்கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களைக்கொண்டு நிகழும் அறிவியல் விளைவுகளைச் செய்து காட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டன.
              இந்தப்பயிற்சியில் நியூட்டன் விதி,பாஸ்கல் விதி,கலிலியோ விதி, வேதிவினை மாற்றம் மற்றும் இயற்கையின் மாற்றம்&தோற்றம் எனப் பலவிதப் பயன்பாடுகள் அடங்கிய செய்முறைகள் எளிமையாக,தெளிவாக,ஆர்வமூட்டும் வகையில் எடுத்தாளப்பட்டன.

          ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியப்பெருமக்களும்,அறிவியல் ஆர்வலர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த அறிவியல் ஆக்கங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவக் கண்மணிகள் உட்பட சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்படும். என அந்தப்பயனாளர்கள் தெரிவித்தனர்.
                அடுத்து வரும்  21, 22 & 23 தேதிகளில் போபால் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  போபாலிலும்,அடுத்ததாக ஹிமாசலப்பிரதேச மாநிலம் -மாண்டியிலும் இந்த நூதன எளிய அறிவியல் பயிற்சி அளிக்கப்போவதாக இந்த அறிவியல் பயிற்சி அமைப்பினர் தெரிவித்தனர்.
                          
               இதன் நோக்கம் நமக்கு முன்னே இருக்கும் அறிவியல் நிகழ்வுகளை கண்டறியவைப்பதும்,அதனால் கிராமப்பகுதியினைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் சமையல் பொருட்கள் உட்பட அன்றாடம் கிடைக்கும் எளிய பொருட்களைக்கொண்டு அறிவியல் நிகழ்வுகளைச் செய்யவைத்து அதன்விளைவாக அறிவியலில் ஆர்வத்தினைத் தூண்டச் செய்வதும்   ஆகும் எனவும் தெரிவித்தனர்.  தென்னிந்திய அளவிலான அறிவியல் பயிற்சி பயிலரங்கத்தினை நடத்திய புதுச்சேரி அறிவியல் இயக்கத்தினர் கலந்துகொண்ட அனைவருக்கும் மூன்று நாட்களும்  உண்ண உணவு    தங்குவதற்கு  ஏற்ற  உறைவிடம் சிறப்பாக ஏற்பாடு செய்து தந்துள்ள விதம் மிகவும் பாராட்டுக்குரியது.இரவு பகல் பாராமல் தேவைக்கேற்ப உதவிகள் செய்த  புதுச்சேரி அறிவியல் இயக்க அனைத்து அறிவியல்ஆர்வலர்கள் & ஆசிரியர்களுக்கு  எங்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். என,,,,,,,,,,

                                              பதிவேற்றம்;- PARAMESDRIVER
                                   TAMILNADU SCIENCE FORUM- THALAVADY
                                                         ERODE DISTRICT-
                                       DATE:-20-JANUARY - 2012 FRI DAY.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி

06 January, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி


     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                   tnsfthalavady.blogspot.com    வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
      
    '' விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்''

          23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-
                  (1) ரோட்டரி கிளப் தாளவாடி,  (2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,  (3)காவல்துறை தாளவாடி,   (4)சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம்,  இணைந்து  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். 
           தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
            (1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி   (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி,  (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம்,   (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை,  (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
             
       முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.

         அனைத்து பள்ளிக்குழந்தைகள்&ஆசிரியர்கள் குழுவின்  பேரணியை தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாத்தினுள் ''கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்'' திருமிகு.M.சிங்காரவேலு B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள்.அருகில்  தாளவாடி பஞ்சாயத்துத்தலைவர் அவர்கள் மற்றும் திகினாரை பஞ்சாயத்து தலைவர் திருமிகு. காளநாயக்கர் அவர்கள்.இவர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள்&பணியாளர்கள்,பொது மக்கள்.(மேலே)





    பேரணியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் பேருந்து நிலையத்தினுள் ,(வெயில் காரணமாக).(மேலே)




 பள்ளிக்குழந்தைகள் ''மத ஒற்றுமைக்கு நல்லிணக்கமாக விளங்கும்'' கோவில்கள் முன்பு ''சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்'' வந்த காட்சி.(மேலே)



                         ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழு'' 
         திருமிகு.சாந்தமல்லப்பா -ரோட்டரி கிளப் தாளவாடித் தலைவர் -அவர்கள் தலைமையுரை ஆற்றிய காட்சி.(மேலே)


         திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர்  சத்தியமங்கலம் அவர்கள்   சாலைப்பாதுகாப்பின் அவசியத்தையும்,விபத்திலிருந்து நம்மைக்காத்துக்கொள்வது பற்றியும் சிறப்புரை ஆற்றிய காட்சி.(மேலே).




             தாளவாடி(CIRCLE) காவல்துறை ஆய்வாளர் திருமிகு.கா.தங்கவேல் -அவர்கள் போக்குவரத்துக்குற்றங்களும்,சட்டங்களும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)


             திருமிகு.அரிமா.K.லோகநாதன் கோபி&சத்தி வட்ட ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி சங்கத்தலைவர் அவர்கள்- ஓட்டுனர் உரிமம் எடுப்பதன் அவசியத்தையும்,வாகனம் ஓட்டும் முறைகள்,சாலை விதிகள்,இன்சூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தையும் விளக்கிய காட்சி.(மேலே)




     திருமிகு.S.வியானி (DIVINE & ROTARY CLUB)அவர்கள் தனிநபர் வாகனக்குறைப்பின் அவசியத்தையும், அதனால் போக்குவரத்து நெரிசல் குறைவும்,சுற்றுச்சூழல் மாசு குறைவும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)



          திருமிகு. அந்தோணி முத்து-(PALM-2 & TNSF) அவர்கள் அங்குள்ள கன்னட மொழி மட்டும் தெரிந்த மக்களுக்காக ''கன்னடமொழியில்'' சாலை விபத்துக்கு நமது அறியாமை  ,தெரிந்தும் செய்யும் தவறுகள் பற்றியும் - சாலைப் பயணத்தின் பாதுகாப்பு பற்றியும் கன்னடமொழியில் விவரித்த காட்சி.(மேலே)


      திருமிகு.மனோஜ் ஆசிரியர் மற்றும் குழுமத்தினர்- டிவைன் மெட்ரிக் பள்ளி ஆகியோர் சாலை விழிப்புணர்வுப்பாடல் பாடிய காட்சி.(மேலே)








             திருமிகு. A.P.ராஜ் (TNSF)அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சமூக அக்கறையின்பேரில் சாலைப்பாதுகாப்பு விழா எடுத்த (1)ரோட்டரி கிளப்,(2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,(3)தாளவாடி காவல்துறை,(4)கோபி மற்றும் சத்தி வட்டார போக்குவரத்துத்துறை இவர்களுடன் துணை நின்ற சத்தி&கோபி வட்டஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர்&உரிமையாளர்கள்,பொதுமக்கள்,பேரணியில் கலந்து கொண்ட அனைத்துப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும்ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றி கட்டுரைகள் எழுதிக்கொடுத்த அனைத்து மாணவ,மாணவியருக்கும்   நன்றி! நவிழ்ந்த காட்சி.(மேலே)





             வரவேற்புரை வழங்கிய  திருமிகு.பரமேஸ்வரன்(TNSF) அவர்கள்        '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதிய அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் அவரவர் பயிலும் பள்ளிகளின் இந்த வருடம் நடைபெறும் ஆண்டு விழாவின்போது பாராட்டுச்சான்றும்,பரிசும் வழங்கப்படும் என அறிவித்த காட்சி.மேலும் சூசைபுரம் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு இயக்கம் (R.S.P)  மற்றும் டிவைன் மெட்ரிக் பள்ளியில் சாலைப்பாதுகாப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அறிந்து பாராட்டு நல்கிய காட்சி.(மேலே)
               23-வது சாலை பாதுகாப்பு 
      விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
             நாள்;- 06-01-2012.
      இடம்;- தாளவாடி பேருந்து நிலையம்.
    நேரம்;-காலை 10-00மணி முதல் 12-00மணிவரை.

       தலைமை;- திருமிகு.சாந்தமல்லப்பா  அவர்கள்,
                          தலைவர்-  ரோட்டரி சங்கம்-தாளவாடி.

     முன்னிலை;- திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                              காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி,

வரவேற்புரை;- திருமிகு.C.பரமேஸ்வரன்  அவர்கள்,
                      தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி,
  
      தலைமையுரை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
             தலைவர்-ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
      சிறப்புரை;- திருமிகு. சிங்காரவேலு அவர்கள்,
           மோட்டார் வாகன ஆய்வாளர் -சத்தியமங்கலம்.
       திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
                            காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி(CIRCLE).
       
       திருமிகு.அரிமா.K.லோகநாதன் அவர்கள்,
                  தலைவர்- கோபி & சத்தி வட்ட ஓட்டுனர்பயிற்சிப்பள்ளி.
    
        திருமிகு.S.மரிய அருள் வியானி அவர்கள்,
                      டிவைன் பள்ளி  மற்றும் ரோட்டரி கிளப் - தாளவாடி.
   
        திருமிகு.அந்தோணி முத்து அவர்கள்,(PALM-2)
                    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.

          விழிப்புணர்வுப்பாடல்;- 
         திருமிகு.மனோஜ் ஆசிரியர்,மற்றும் 
                                 குழுமத்தினர்
                            டிவைன் மெட்ரிக் பள்ளி - தாளவாடி.

          நன்றியுரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,
                       தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி. 

நன்றிகள்;-             
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம்  அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
                (2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
     ''தாளவாடி வட்டார  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு'' 
    சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.       
                        ROTARY CLUB OF THALAVADY,
               TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
               POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
            REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
                    ASSOCIATION OF DRIVING SCHOOLS,
                         ALL SCHOOLS OF THALAVADY.
 ======================================================================
 tnsfthalavady.blogspot.com //  paramesdriver.blogspot.com // konguthendral.blogspot.com //



அறிவியல் திருவிழாவா?!?நல்ல பதிவு இதைப்படிங்க!


Jan 5, 2012

             அறிவியல் திருவிழா..


இது என்ன அறிவியல் திருவிழா? வித்தியாசமாக இருக்கிறதே என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கொஞ்சம் அப்பாற்பட்ட நண்பர்களுக்கு தோன்றக்கூடும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தமிழகம் முழுக்க அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டது நான் இங்கே சொல்லப்போவது..

டிப்டாப்பான மெட்ரிக் மாணவர்களும் சட்டைப்பித்தானின்றி பின்னூக்கு அணிந்த அரசுப்பள்ளி மாணவர்களும் ஒன்றாய் கலந்துகொண்ட திருவிழா.. மிகப்பெரிய மாநகரங்களைச் சேர்ந்த மாணவர்களும் எந்தவிதத்திலும் வெளியுலகிற்கு அறிமுகமே ஆகாத, போக்குவரத்து வசதிகளேகூட இல்லாத மிகப்பின்தங்கிய கிராமத்து மாணவர்களும் ஒருசேரக் கலந்து கொண்ட திருவிழா.. தமிழகம் முழுவதுமிருந்து இண்டர்நேஷனல் பள்ளிகள்,அரசுப் பள்ளிகள்,அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், துளிர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் பயிலும் சிறப்புப் பள்ளிகள், இரவுப் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு திருவிழா.. ஆம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த நவம்பர் 24,25,26 தேதிகளில் சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடுதான் அந்த திருவிழா..!


இதுவெறும் குழந்தைகள் அறிவியல் மாநாடு தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். குழந்தைகளின் ஆய்வுகள் பல்வேறு சூழ்நிலைகளில் நீதிமன்றத்தீர்ப்புகளுக்கெ அடிப்படையாக இருந்திருக்கிறது.. பல ஊர்களில் உள்ள நீர்நிலைகளைக் காப்பாற்றி மேம்படுத்தியுள்ளது. திருப்பூர் சாயப் பட்டறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. உள்ளூர் மக்களின் பாரம்பரிய விவசாயம் குறித்து, உள்ளூர் வளங்கள் குறித்து ஆய்வுபுரிந்து வெளியுலகிற்குச் சொல்கின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த 2004ம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி பேரழிவுக்குப் பின் குழந்தைகள் மேற்கொண்ட ஆய்வினால் அலையாத்திக்காடுகள் இருந்த பகுதிகள் பெருமளவு சேதத்திலிருந்து தப்பியுள்ளதைக் கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். தற்போது மத்திய அரசின் சார்பில் அலையாத்திக் காடுகளை மேம்படுத்த சுமார் 400 கோடியை ஒதுக்கியிருக்கிறது.


இந்த மாநாடு மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் மாவட்ட அளவிலான மாநாடுகளில் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 
 
அதில் சிறப்பாக ஆய்வு புரிந்த 196 மாணவ ஆய்வுக்குழுக்கள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டு கலந்துகொண்டனர். நிலவளம்:வளத்திற்காகப் பயன்படுத்துவோம், வருங்காலத்திற்கும் பாதுகாப்போம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் தமிழ்-இளையோர், தமிழ்-மூத்தோர், ஆங்கிலம்-இளையோர், ஆங்கிலம்-மூத்தோர் என நான்கு பிரிவுகளில் குழந்தைகள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். மாநில மாநாட்டில் இருந்து 30 ஆய்வுக்குழுக்கள் குழந்தை விஞ்ஞானியர் விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் இந்த மாதம் 27-31 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டனர். மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு இம்மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
 
நம் தேசம் முழுவதுமுள்ள அனைத்து ஆய்வு நிறுவனங்களில் இருந்தும் விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2வது வாரம் நடைபெறும். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள மிகச்சிறப்பான தலைப்புக்களை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்ட 2 ஆய்வுக்குழு மாணவர்கள் (தமிழகத்திலிருந்து) இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். எவ்வளவு பெரிய சிறப்பு!

மக்கள் அறிவியல் இயக்கங்களின் சோதனை முயற்சியில் துவங்கி இன்று இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது வாழ்விடத்தில், பள்ளிகளில் சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அதுகுறித்து மூன்று மாதங்கள் ஆய்வு புரிந்து அதனைச் சமர்ப்பித்து வருகின்றனர். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையும் தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவும் அறிவியல் இயக்கங்களும் இணைந்து நடத்தக்கூடிய இம்மாநாட்டில் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமின்றி இடைநின்ற மாணவர்களும்கூட பங்கேற்கலாம். வயது 10 முதல் 17 என்பதைத் தவிர எவ்வித தடைகளும் இல்லை. சாதிக்கத் துடிக்கும் மாணவ கண்மணிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு..!


படித்த அறிவியலை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் சமூகப் பிரச்சனைகளுக்கு அறிவியல் வழிமுறையில் தீர்வுகளைச் சொல்லவும் பரந்துபட்ட மக்களுடன் ஒருங்கிணைந்து வாழவும் இந்த மாநாடு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது. அதனினும் மேலாக பங்கேற்ற குழந்தைகள் பேசும்போது பெரியவர்களுக்கே கூட இல்லாத மனப்பக்குவத்தோடு பேசுகின்றனர். 
 
எனக்கு வெற்றி தோல்வியெல்லாம் பிரச்சனையில்லை. எனது ஆய்வின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். மற்றவர்களின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்றும் தேசிய அளவிலான மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. கலந்துகொள்கின்ற மாணவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சிரித்தமுகத்தோடு சொல்லும் அந்த குழந்தைகளுக்கு உரக்கக் கைதட்ட தோன்றுகிறது நமக்கு.. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதே நான் செய்த பாக்கியம். எனக்கு உதவி செய்த தலைமை ஆசிரியருக்கும், மூன்று மாதங்களாய் எவ்வித முகச்சுழிப்பும் இல்லாமல் வழிகாட்டி உதவிய ஆசிரியருக்கும் வாய்ப்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும் நன்றி என சில குழந்தைகள் கண்ணீர் மல்க பேசும்போது எழுந்து நிற்கத் தோன்றுகிறது அவர்களின் மனமுதிர்ச்சிக்கு மரியாதையாய்.. வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஒரு மாபெரும் குழந்தைகள் அறிவியல் மாநாடு இதுவரை நடந்ததில்லை. அதனால்தானோ என்னவோ பக்கத்து நாடுகளான வங்கதேசம், நேபாளத்தில் இருந்துகூட குழந்தைகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாநாட்டைக் கடந்த 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து நடத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களும், தொடர்ந்து தமது பள்ளிக் குழந்தைகளை அறிவியல் பாதையில் அழைத்துச் செல்கின்ற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டிற்குறியவர்கள்.. அதுசரி, அடுத்த ஆண்டு உங்கள் பள்ளியிலிருந்தும் கலந்துகொள்வீர்கள் தானே?
-தேனி.சுந்தர்.(9488011128) 
    பதில்உரை;-மரியாதைக்குரிய தேனி சுந்தரம் அவர்களே,வணக்கம்.உறுதியாக தாளவாடியில் இருந்து கன்னடமொழி உட்பட மூன்று மொழி மாணவர்களை கலந்துகொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்!தங்களைப்போன்றவர்கள் ஆதரவு உள்ள வரை,என tnsfthalavady.blogspot.com //
 
நன்றி: புதிய ஆசிரியன் ( www.puthiyaaasiriyan.com)