வியாழன், 28 ஆகஸ்ட், 2014

டெலிகிராம் VS வாட்ஸ் ஆப்



மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். WhatsApp அல்லது Telegram பயன்படுத்தும் ஆர்வம் உள்ளவர்களே! உங்களுக்காக இந்த பதிவு.........


           வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள் இது முற்றிலும் இலவசம் :-
                 முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது. இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப் லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக் கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிக் கொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் வாட்ஸ்ஆப்-யை விட டெலிகிராம் மென்பொருள் சிறந்தது தானே. இன்றே இதை டவுன்லோட் செய்து பாதுகாப்பாக சாட்டிங் செய்யுங்கள்.

இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:

android - https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

iphone/ipad - https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810

windows mobiles - http://www.windowsphone.com/en-us/store/app/telegram-messenger-beta/945b96a7-aadc-4dd0-806a-c2d1e0e6ca9a

website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/

mac os x - https://itunes.apple.com/us/app/messenger-for-telegram/id747648890

pc mac/windows/linux - https://tdesktop.com/

தஞ்சை பெரிய கோயில் ரகசியம்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

             தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.

நம்
கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! !

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும்

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

பெரிய கோயில் அளவுகோல்…
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை

1, விரல்,
2, மானாங்குலம்,
3, மானம் என்று அழைத்தனர்.
4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள்

1.2 மீ ஷ்
1.2 மீ சதுரத்தில்
0.6 மீ ஷ்
0.6 ஷ்
0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும்,
சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர
தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !!

‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம்.

“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”

“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.

“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.”

“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”

‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்

keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.
புகைப்படம்: தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.

நம்
கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! !

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும்

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. 

பெரிய கோயில் அளவுகோல்…
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை

1, விரல்,
2, மானாங்குலம்,
3, மானம் என்று அழைத்தனர்.
4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் 

1.2 மீ ஷ்
1.2 மீ சதுரத்தில்
0.6 மீ ஷ்
0.6 ஷ்
0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும்,
சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர
தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !!

‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம்.

“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”

“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.

“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.”

“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”

‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்

keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.

அறிந்து கொள்ளுங்க!

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நான் விரும்பும் சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
           
கேவலமான உண்மைகள் !
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ ரூபாய்  40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்.

இலந்தை (ZIZIPHUS JUJUBA) !

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.
 
இலந்தை (ZIZIPHUS JUJUBA) !
நம்மில் பலபேர் அருவெறுப்புடன் நோக்கும் ஒரு அரிய பழம் இது. வட்டவட்டமான இலைகளையும், முட்களையும் கொண்டிருக்கும் இதன் மரம் அதிகளவாய்ப் பன்னிரண்டு அடி உயரம் மட்டுமே இருக்கும். இக்கனியில் காட்டு இலந்தை, சீமை இலந்தை என இரண்டு வகையுண்டு. மருந்து என்று வருகின்றபொழுது, நாம் இந்தக் காட்டு இலந்தை, அதாவது சின்ன இலந்தையைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அப்படிச் சின்ன இலந்தை கிடைக்காத நிலையில் நாம் சீமை இலந்தை எனப்படும் பேரிலந்தையைப் பயன்படுத்தலாம்.
இது உண்ணக்கூடியது மட்டுமல்லாமல் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருப்பது. இதில் இல்லாத சத்தே இல்ல எனலாம். அமினோ அசிட் (amino acid), புரதச் சத்து (Proteins), விட்டமின்கள் (Vitamins), தாது உப்புக்கள் (Minerals), சுண்ணாம்புச் சத்து (Calcium), இரும்புச் சத்து (Iron) போன்றவை அடங்கியது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் இதை உண்ணலாம்.
இது ஒரு astringent. நம் உடலில் உள்ள எந்தவகையான சுரப்பிகளிலும் வரக்கூடிய தேவையற்ற வீக்கத்தினை வடித்து வற்றச் செய்யக்கூடிய ஆற்றலுள்ளது இக்கனி. இதன் சமூலம், (இலை, பட்டை மற்றும் வேர்) மருத்துவ குணம் பொருந்தியவை. உடல் உறுப்புகளை வலு பொருந்தியதாக ஆக்கக்கூடியது இக்கனியை மென்று தின்கையில், பல்லிற்கும், ஈற்றிற்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு இரத்தம் கசியும் ஒரு நிலையான ‘பயோரியா’வைக் குணப்படுத்தும். பற்களில் படியும் அனைத்துக் கிருமிகளையும் போக்கும் மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படும். உடல் சூட்டை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. இக்கனி, பித்தத்தினை நீக்கக்கூடியது. சிறுநீரகத்தை வலுவாக்கும். பேதியை நிறுத்தும். முக்கியமாக இரத்த அழுத்தத்தினைச் சமப்படுத்தும். இரத்த அழுத்தினால் வரும் தலை வலி, மன அழுத்தம் போன்றவற்றினைச் சரிப்படுத்தும். கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். இலந்தை மரத்தின் வேரை அரைத்து, மூட்டு வலிக்கு பூச, மூட்டுவலி குணமாகும். சிறந்த நார்ப்பொருள் (Fiber) அடங்கியுள்ளதால், மலச் சிக்கலை போக்கக் கூடியது.
இதன் இலையை அரைத்துப் பசையாக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை போகும். இதன் இலையைப் பசையாய் அரைத்துப் புழுவெட்டு கண்டுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து, அரைமணிநேரம் ஊறவைத்துப் பின் குளித்துவர, புழுவெட்டு குணமாகும். இலந்தை வேரினை நன்றாகக் காயவைத்துப் பொடிசெய்து வைத்து, அதனைக் காயங்களின்மேல் தூவிவர, ஆறாத காயமும் ஆறும்.

இலந்தைப் பழக் குடிநீர் அல்லது தேநீர்: இலந்தைப் பழங்களை நசுக்கிக் கொட்டை நீக்கிப் பசைபோல் செய்து கொண்டு, அதனோடு நீரும் பனை வெல்லமும் சேர்த்துக் காய்ச்சி தேநீர்போல் அருந்தி வரலாம். மிக்க சுவையுடையது. வயிற்றுப்போக்கு ஏற்படுகையில், இக்குடிநீர் மிகுந்த பயன் தரக்கூடியது, இது இரத்தப் போக்கு, சீதபேதி போன்றவற்றை நிறுத்தும், உடலுக்கு உற்சாகத்தைத் தரும். வயிற்றுப்போக்கின் மூலம் வரக்கூடிய நீரிழப்பை (Dehydration) உடனடியாகச் சரிசெய்து உடலுக்கு உற்சாகத்தையும் வலுவையும் தரக்கூடியது. இதே குடிநீர், ஆண்களுக்கு ஒரு உரமேற்றியாகவும், இல்லற வாழ்வில் குறையற்று ஈடுபடுமளவிற்கான ஊக்கிப் பானமாகவும் (sexual tonic), நரம்பு மண்டலத்தினை வலுப்பெறச் செய்யவும் பயன்படும்.
இலந்தையிலைக் குடிநீர்: இலந்தை இலையை அப்படியே நீரில் இட்டு நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டி, அதனோடு தேன் சேர்த்துப் அருந்திவர, மூளை நன்கு வலுப் பெரும். நினைவாற்றலை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தையும் மிகவும் வலுப்படுத்தும் ஒரு உற்சாகப் பானமாகப் பயன்படும். பெண்களுக்கு இருநாள் தாண்டியும் போகக்கூடிய மாதவிடாய் இரத்தப்போக்கினைக் (Menorrhagia) கட்டுப்படுத்தும்.
இப்படியான மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த இலந்தையை, வெறும் Jujube என்று எள்ளி நகையாடித் தூக்கி எறியாமல் பயன்படுத்துவீர்களேயானால், வாழ்வில் இறுதிவரை நலமோடும், ஆரோக்கியத்தோடும் வாழலாம். உங்கள் பிள்ளைகளின் பள்ளி வாயிலில் கிழவியொருத்தி ஐம்பது காசுக்கும் ஒரு ரூபாய்க்கும் இதனை விற்றுக் கொண்டிருப்பாள். இனிமேலாவது அதனை அருவெறுப்புடன் பார்த்துப் பிள்ளைகளை ‘அதனை வாங்கி உண்ணக்கூடாது’ என்று கட்டுப்படுத்தாமல், ஐஸ் க்ரீம், குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் போன்றவற்றினைத் தவிர்த்து, இதனை வாங்கி உண்ணுமாறு அறிவுறுத்துங்கள். பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும், அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாகவும், படிப்பில் வல்லவர்களாகவும், நோய் எதிர்ப்புசக்தி மிகுந்தவர்களாகவும், நீண்ட, ஆரோக்கியமான வாழ்வினைப் பெற்றவர்களாகவும் வளர்வர்.
‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி- சத்தியமங்கலம்.-2014

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். தயவுசெய்து இந்தப்பதிவினை முழுமையாகப் படியுங்க...சத்தியமங்கலம் புத்தகக் கண்காட்சி 15-10-2014 இல் நடத்த தயாராகுங்க....

     ( முன்னதாக) தங்கள் மேலான கவனத்திற்கு - ஈரோடு  புத்தகத் திருவிழா பற்றிய ஒரு கண்ணோட்டம்.
        '' மக்கள் சிந்தனைப்பேரவை'' அமைப்பிற்கு நன்றிங்க. அனைவரின் கவனத்திற்கு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டார அனைத்து மக்களும் புத்தக வாசிப்புத்திறனை பெற வேண்டும்.என்ற எண்ணத்தில் சத்தியமங்கலத்திலும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான பணிகளை புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்...தங்களது ஆதரவை கொடுத்து உதவ வேண்டுகிறோம்.ஆதரவு என்பது புத்தக அரங்கு அமைக்க ,படைப்பாளர் மேடை அமைக்க,மிக முக்கிய பிரமுகர்களை அழைத்து கருத்தாக்கம் வழங்கிட,ஒலிபெருக்கி வசதி அமைத்திட,மின் வசதி கொடுத்திட,ஒளி மின் விளக்குகள் அமைத்திட,அழைக்கும் சான்றோர் மேன்மக்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்திட,என்ற பயனுள்ள வகையில் ஆதரவு கொடுத்த உதவினால் நன்று....
           
             

ஈரோடு புத்தகத் திருவிழா-2014
மேலோட்டமான செய்தித் தொகுப்பு

மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் பத்தாம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா, கடந்த ஆகஸட் 1 முதல் 12 வரை மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
எல்லாக் கோணங்களிலும் தரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழாவாக இது பரிணமித்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்குமிருந்து மிக முக்கியமான புத்தக நிறுவனங்கள் வந்து அரங்குகள் அமைத்திருந்தன.
இந்தியாவில் நடைபெறும் பெரிய பெரிய புத்தகக் கண்காட்சிகளில் கூட இதுவரை அரங்கு அமைக்காத சில வெளிநாட்டு புத்தக நிறுவனங்களும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்குகள் அமைத்திருந்தன.
சமூக முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல நூல்கள் உலகின் எந்த மூலையில் இருப்பினும் அது ஈரோடு புத்தகத்திருவிழாவில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மக்கள்சிந்தனைப் பேரவை எடுத்த தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே அதைக் கொள்ளலாம்.

‘தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கம்’ என்கிற பெயரில் ஒரு சிறப்பு அரங்கம் நிர்மாணிக்கப்பட்டு, அதில் - இந்தியாவைத் தாண்டி, உலகெங்குமுள்ள தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகள் மட்டும் இடம் பெற்றன. பல்லாயிரம் தலைப்புகளில் நூல்கள் இங்கே பார்வைக்கும் விற்பனையில் வைக்கப்பட்டு, பார்ப்போரைப் பரவசப்படுத்தின.
மேலும் இந்தச் சிறப்பு அரங்கில் வெளிநாட்டு தமிழ்ப்படைப்பாளிகளின் படங்களும் அவர்களைப்பற்றிய குறிப்புகளுடன் இடம் பெற்றிருந்தன. இது பார்வையாளர்களுக்கு நெஞ்சைக் கவர்ந்த அம்சமாக இருந்தது.

'படைப்பாளர் மேடை' என்கிற சிறப்பு எற்பாடு ஒன்று ஒவ்வொரு நாளும் உயிரோட்டமாக நடைபெற்றது. படைப்பாளருடன் வாசகர்கள் நேரடியாகக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்கான அற்புதத் தளமாக இந்த ‘படைப்பாளர் மேடை’ திகழ்ந்தது. சுகி.சிவம், கவிக்கோ அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, கவிஞர் பெ.சிதபம்பரநாதன், கவிஞர் கே.ஜீவபாரதி உள்ளிட்ட புகழ்பூந்த படைப்பாளிகள் வாசகர்களை இப்படைப்பாளர் மேடையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
மொத்தம் 230 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 12 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகத்திருவிழாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 7 கோடி ரூபாய்க்கும் மேலாக புத்தகங்கள் விற்பனையாகின.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இசைஞானி இளையராஜா இந்த புத்தகத்திருவிழாவைத் தொடங்கி வைக்க புத்தகத்திருவிழாவின் சிந்தனை அரங்க மேடையில், சுகி.சிவம், நெல்லை கண்ணன், கு.ஞானசம்பந்தன், கபிலன் வைரமுத்து, மரபின் மைந்தன் ம.முத்தையா, இளம்பிறை மணிமாறன், நடிகர் சிவகுமார், இலங்கை ஜெயராஜ் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கமும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றமும், புற்பவனம் குப்புசாமி, அனிதாகுப்புசாமி தம்பதியரின் இசைநிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக மக்கள் வரவேற்பைப் பெற்றன.
தினசரி மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுகளில் சுமார் 10,000 பேர் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் இடையில் சில சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பல்லாயிரம் பேர் பார்வையாளர்களாக விளங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மிகுந்த எழுச்சி காணப்பட்டது.
நிறைவு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் வருகை புரிந்து நிறைவு விழாச் சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். ஈரோடு புத்தகத்திருவிழா நிகழ்ச்சிக்கு, இது அவரது இரண்டாவது வருகை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
விழா மேடையில் அமர்ந்திருந்த அவருக்கும், கீழே அலைஅலையாய் திரண்டு அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கும் இடையே ஊடாடிய நெகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஊக்கமும் எழுச்சியும் ஊட்டத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அவரது உரை அமைந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி மற்றும் அக்னி ஸ்டீல்ஸ்; நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் எம்.சின்னசாமி வாழ்த்துரை வழங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ந.அன்பரசு நன்றியுரைத்தார்.
இந்தியாவெங்கும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு பயன்பட்ட புத்தகத் திருவிழா இதுவாகத் தான் இருக்க முடியும்.
ஈரோடு புத்தகத் திருவிழா தேசியத் தரத்துடன் விளங்கிய மாநிலத்தழுவிய புத்தகத் திருவிழாவாகத் திகழ்ந்தது.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இணையதள நணபர்கள் சந்திப்பு-தீர்மானங்கள்.2014

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். 
            இன்று 68ஆம் சுதந்திர திருநாள்..இன்று சந்தன நகரம் என்றழைக்கப்படும் சத்தியமங்கலத்தில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவக்கிய சிறப்பான நாள்...

                 15.08.2014வெள்ளிக்கிழமை இன்று காலை 11.00 மணிக்கு  ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்- ரங்கசமுத்திரம்  MLA  (பவானிசாகர் சட்டமன்றத்தொகுதி)அலுவலகம் அருகிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் இணையதள நண்பர்கள் சந்திப்பு முதல் மற்றும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.திரு.R.சதீஷ்குமார்-சென்னை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திருமதி.M.செல்வி H.M. அம்மையார் அவர்கள் தலைமை ஏற்றார்.திரு.R.கருப்புசாமி (READ)இயக்குநர் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இணையதள நண்பர்கள் சந்திப்பு நோக்கம் பற்றி உரை நிகழ்த்தினார்.Dr.M.பாலசுப்பிரமணியம் (ஈரோடு)அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.திரு.S.V.ஆனந்த் (கோயமுத்தூர்)அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.திரு.`R.வினோத்குமார் B.E.,அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடு திரு C. பரமேஸ்வரன் அவர்கள் செய்து இருந்தார்.சத்தி வட்டார பகுதிகளிலிருந்து இணையதள நண்பர்கள் கலந்து கொண்டனர். கீழ்கண்டவாறு அதாவது (1) சத்தியமங்கலம் வட்டாரம் பற்றிய தகவல் ஏடு வெளியிடுவது,(2)இளைய முதாயத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டுவது,(3) அக்டோபர் 15 முதல் 19 வரை புத்தக கண்காட்சி நடத்த தேவையான உதவிகளை செய்வது குறிப்பாக விளம்பரம் செய்வது ,(4) வலிமையான வலைப்பின்னல் உருவாக்குவது,(5)ஏராளமான உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது,(6)Dr.P.பாலசுப்பிரமணியம்-ஈரோடு அவர்களை கௌரவ ஆலோசகராக ஏற்பது (7) போதை,புகை,மது பழகங்களின் தீமைகள்பற்றி விழிப்புரை கொடுப்பது,(8)பிளாஸ்டிக் ,மின்னணு சாதனங்கள் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு,தண்ணீர் மாசு,காற்று மாசு,போன்ற சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புரை செய்வது,(9) இளைய சமுதாயத்திற்கு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் திரைப்படத்துறை போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது,(10) சிவில் சர்வீஸ்,அரசுப்பணிகளுகான போட்டித்தேர்வுகள் வங்கி போன்ற நிதி மேலாண்மைத்துறைகளில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் கொடுப்பது,(11)வாசிப்புத்திறனை மேம்படுத்துவது மற்றும் அரசு நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க உதவி செய்வது,(12)அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உதவி செய்வது (13)சமுதாய நலப் பணிகளை தனியாகவோ,பிற அமைப்புகளுடன் இணைந்தோ செய்வது,(14) சத்தியில் ஊர்க்காவல் படை உருவாக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்பு பதிவு-15.08.2014

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
நன்றி அறிவிப்பு பதிவு இது ........அனைவரும் படியுங்க.........,தங்களது தளத்தில் பகிருங்க......நன்றிங்க.......
 
 
 
நன்றி அறிவிப்பு பதிவு...
மரியாதைக்குரியவர்களே,

       

வணக்கம்.திட்டமிட்டபடி 68ஆம் சுதந்திரதினமான நேற்று 15-08-2014 வெள்ளிகிழமை நமது சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நண்பர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக ,''இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி'' ரங்க சமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை11.00மணிக்கு நண்பர்கள் சுயஅறிமுகத்திலிருந்து துவங்கி பல்வேறு கருத்தாக்கங்களுடனும்,கலந்துரையாடல்களுடனும்,திட்டமிடலுடனும்,கருத்தரங்கம் மற்றும் விவாதங்களுடனும்,மதியம்2.10மணி வரை சுருக்கமாக! சுருக்கமாக!! என்று அவ்வப்போது அறிவுறுத்தியும் எவ்வித தொய்வுமின்றி மிக சந்தோசமாக-மன நிறைவாக நிறைவுற்றது.டாக்டர்.ப.பாலசுப்ரமணியம்(விஜயலட்சுமி) அவர்கள் அனைத்திந்திய தலைமை இயக்குநர்-அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் -ஈரோடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு மற்றும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அரசு பணி சார்ந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும்அந்த பயிற்சியில் சத்தியமங்லம் வட்டார இளைய சமுதாயத்திற்கு அனைத்து உதவிகள் செய்து கொடுப்பதாகவும்,நடிப்பு உள்ளிட்ட கலைத்துறையிலும் வாய்ப்பு அளிக்க போதுமான ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறி நமக்கு பெருமை தேடி தந்துள்ளார். அதே போல READ சமுக சேவை இயக்குநர் திரு.கருப்புசாமி அவர்கள் துவக்கவுரையில் மனித உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகள் பற்றி சிறப்பான உரை கொடுத்து நமக்கு விழிப்பு கொடுத்து உள்ளார்.நகராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் பள்ளியில் இடம் கொடுத்து ஆசிரிய,ஆசிரியை பெருமக்களின் உதவியோடு நிகழிடத்தின் அறையை அழகுபடுத்தி ,மின் வசதி ஏற்படுத்தி கொடுத்து,ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி கொடுத்து எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை ஏற்று நடத்தி கொடுத்து உள்ளார்.திரு.லோகநாதன்( லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இளைய சமுதாயத்திற்கு இயன்ற அளவு தன்னால் கொடுக்க முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர்15 தேதி முதல் 19 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.திரு.சதீஷ்குமார் அவர்கள் சென்னையிலிருந்து வருகை தந்து இணையதள நண்பர்களை ஒருங்கிணைத்து சிறப்பான வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.திரு.ஆனந்த் கோயமுத்தூர்அவர்கள் சமுகசேவை மற்றும் இளைய சமுதாயம் அனைவரையும் ஒருங்கிணைத்து இன்னும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்களை உயர்கல்வி ,ஒழுக்கம்,சுற்றுச்சூழல்,மனித உறவு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வை கொடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.அன்றைய தினம் காலையில்கூட இணையதள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு பத்து உறுப்பினர்களுடன் வருவதாக கூறி? புறப்படும் தருவாயில் எதிர்பாராத விபத்துக்கு ஆளாகி வர இயலாமையை மாலையில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்த திரு.சௌந்தர் திருப்பூர் அவர்களை பாராட்டுகிறோம்.தாங்கள் எல்லா வளமும் பெற்று இன்னும் வளமிக்கவராக உயரவேண்டும்.அப்போதுதாங்க எங்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கும்.(திரு.சௌந்தர் அவர்களுக்கு அனைவரின் சார்பாக கூறுவது என்னவெனில் தாங்கள் முதலில் தீ விபத்தின் வேதனையிலிருந்து மீண்டு வாருங்கள்,மீண்டும் சந்திப்போம்.நாம் எதையுமே இழப்பதில்லை-நமது மனதை இழக்கும்வரை என்ற கூற்றினை மனதில் வைத்துக்கொண்டு தில்லாக செயல்படுங்கள்.கேள்விப்பட்ட எங்களால் ஆறுதல் கூட கூற இயலாமையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.கண்டிப்பாக தங்களுடைய ஆர்வத்திற்கு என்றும் இணையதள நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.வருங்காலத்தில் தாங்களே முன்னின்று நடத்தலாம் வாங்க.) எத்தனையோ அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழில்கள் வேலைகள் இருந்தும் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு கலந்துகொண்டு சிறப்பித்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ஒருநாள் தாங்கள் செலவிட்ட நேரமானது வாழ்நாள் பயனுள்ள மூலதனமாக அமைந்து இருக்கும் என நம்புகிறேன்.மாறு கருத்து உள்ளவர்கள் கண்டிப்பாக இங்கேயே பகிரவும்.உங்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்.என அனைரவருக்கும் நன்றிகூறி இனி வருங்காலங்களில் இன்னும் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்கு அனுபவமே சிறந்த வழிகாட்டி ஆதலால் வாங்க அனுபவப்படலாம்.அடுத மாதம் தாளவடி வட்டார பள்ளி மாணவ,மாணவியருக்கான சதுரங்க விளையாட்டுப்போட்டி நடத்த உள்ளோம்.அதற்கு இணையதள நண்பர்கள அமைப்பு என்னமாதிரியான உதவிகள் கொடுக்கலாம் என கருத்து கூறுங்கள்.உங்கள் மனதில் என்ன உள்ளது? என்பதை தெரிவியுங்கள்.அடுத்த வேலையாக சத்தியமங்கலத்தில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் இணையதள நண்பர்கள் சார்பாக கொடுக்கும் உதவிகள் என்னவென்று அனைவரும் தங்களது கருத்தினை கூறுங்கள்.நம்ம சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பின் தளத்தை உங்களது பயிற்கு பயன்படுத்துங்கள்.பதிவிடுங்கள்.பகிருங்கள்.தவறு பற்றி கவலைப்படாதீர்.உங்கள் எண்ணங்களை கூறுங்கள்..என அன்புடன் -பொறுப்பாளர்கள் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு-தேதி 16-08-2014சனிக்கிழமை.

இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-2014

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். இன்று 68ஆம் சுதந்திர திருநாள்..இன்று சந்தன நகரம் என்றழைக்கப்படும் சத்தியமங்கலத்தில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவக்கிய சிறப்பான பொன்னாள்...இன்று காலை 11.00 மணிக்கு ரங்கசமுத்திரம் MLA அலுவலகம் அருகிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவங்கியது.திரு.R.சதீஷ்குமார்-சென்னை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திருமதி.M.செல்வி H.M. அம்மையார் அவர்கள் தலைமை ஏற்றார்.திரு.R.கருப்புசாமி (READ) அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இணையதள நண்பர்கள் சந்திப்பு நோக்கம் பற்றி உரை நிகழ்த்தினார்.Dr.M.பாலசுப்பிரமணியம் (ஈரோடு)அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.திரு.S.V.ஆனந்த் (கோயமுத்தூர்)அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.திரு.`R.வினோத்குமார் B.E.,அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடு திரு C. பரமேஸ்வரன் அவர்கள் செய்து இருந்தார். கீழ்கண்டவாறு அதாவது (1) சத்தியமங்கலம் வட்டாரம் பற்றிய தகவல் ஏடு வெளியிடுவது,(2)இளைய முதாயத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டுவது,(3) அக்டோபர் 15 முதல் 19 வரை புத்தக கண்காட்சி நடத்த தேவையான உதவிகளை செய்வது குறிப்பாக விளம்பரம் செய்வது ,(4) வலிமையான வலைப்பின்னல் உருவாக்குவது,(5)ஏராளமான உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது,(6)Dr.P.பாலசுப்பிரமணியம்-ஈரோடு அவர்களை கௌரவ ஆலோசகராக ஏற்பது (7) போதை,புகை,மது பழகங்களின் தீமைகள்பற்றி விழிப்புரை கொடுப்பது,(8)பிளாஸ்டிக் ,மின்னணு சாதனங்கள் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு,தண்ணீர் மாசு,காற்று மாசு,போன்ற சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புரை செய்வது,(9) இளைய சமுதாயத்திற்கு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் திரைப்படத்துறை போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது,(10) சிவில் சர்வீஸ்,அரசுப்பணிகளுகான போட்டித்தேர்வுகள் வங்கி போன்ற நிதி மேலாண்மைத்துறைகளில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் கொடுப்பது,(11)வாசிப்புத்திறனை மேம்படுத்துவது மற்றும் அரசு நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க உதவி செய்வது,(12)அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உதவி செய்வது (13)சமுதாய நலப் பணிகளை தனியாகவோ,பிற அமைப்புகளுடன் இணைந்தோ செய்வது,(14) சத்தியில் ஊர்க்காவல் படை உருவாக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இணையதள நண்பர்கள் இயக்கம்-சத்தியமங்கலம்.

                                அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
                                        அதற்குப ஆங்கே செயல் - குறள் 333.
                                    ============================================



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். நான் விரும்பும் சத்தியமங்கலம் ( I LOVE SATHY )  வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். வருகிற 2014 ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சந்தன நகரம் என்னும் சத்தியமங்கலத்தில் உள்ள லோகு டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் இணையதள நண்பர்கள் இயக்கம் - துவக்கவிழா மற்றும் ''சமூக சேவை-நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி'' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.எனவே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
குறிப்பாக சத்தியமங்கலத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் உலகளவில் எங்கு என்ன பணி புரிந்தாலும் ஆதரவு கொடுத்து 
        தகுந்த ஆலோசனை கொடுத்து, நிதியுதவியும் கொடுத்து அதனை முழுமையாக,சிக்கனமாக  செலவிடப்படுகிறதா? எனவும் கண்காணித்து நம்ம வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டியாக உதவ அன்புடன் அழைக்கிறோம்..அனைவரும் வாங்க,,வளமான ஆலோசனை தருக...

         அதன் நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு.

 இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-சத்தியமங்கலம்.
 தினம் ஒரு நன்மை செய்வோம்-தினம் ஒரு குறள் படிப்போம்.
                       -- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - -- 
 இடம்;லோகு டிரைவிங் ஸ்கூல் -சத்தியமங்கலம்.
நாள்; 15 ஆகஸ்டு 2014.வெள்ளிக்கிழமை. நேரம் காலை 10.30 மணி.

(1) தமிழ்த்தாய் வாழ்த்து,
(2)தலைமை
(3)வரவேற்புரை
(4)துவக்கவுரை
(5)மௌன அஞ்சலி - 
                (சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கும்,தற்போது நாட்டைக் காக்க உயிர் நீத்த இராணுவத்தினருக்கும்,நம்ம நகர காவலர்களுக்கும்,தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களுக்கும்.)
(6)சமூக ஆர்வலர்களை நினைவு கூறல் மற்றும் போற்றுதல் (உதாரணமாக கல்விக்காக உதவி செய்யும்விஜயலட்சுமி அறக்கட்டளை திரு.ஆறுமுகசாமி ஐயா அவர்கள் ,கோபிசெட்டிபாளையம் அமரர் லட்சுமண அய்யர் அவர்கள்,அமரர் தாசப்ப கவுடர் அவர்கள்,கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை,இன்னும் நமக்கு தெரியாத அனைத்து சமூக நல சேவையாளர்களை கண்டுணர்தல் அவர்கள் போன்றோரை  வணங்கி பாராட்டு நல்குதல்).
(7)இணையதள நண்பர்கள் இயக்கம்- துவக்கத்தின் நோக்கம்.
(8)நிர்வாகிகள் தேர்வு
(9)கருத்தரங்கம்-
 தலைப்பு ; ''சமூக சேவை நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி''.
அன்றையதினம் -திட்டமிடல், உறுப்பினர் சேர்க்கை,நேர மேலாண்மை,நிதிமேலாண்மை,கலாச்சார பாதுகாப்பு,குடும்ப உறவு,முதியோர் ஆதரவு,குழந்தைகள் பாதுகாப்பு,பெண்கள் பாதுகாப்பு, பயணங்களில் பாதுகாப்பு,இளைய சமுதாயத்திற்கான வருங்கால தேவைகளை பூர்த்திசெய்ய தக்க வழிகாட்டி மையம் அமைத்தல்,விளையாட்டு போட்டி வைத்தல், இளைஞர்களை ஒன்று திரட்டி ஊர்க்காவல் படை அமைப்பு,கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தானம் செய்தல் விழிப்புணர்வு,சாலை பாதுகாப்பு,வேலை மற்றும் தொழில் வாய்ப்பு,விடுபட்டவர்களை இணைத்தல்,பிளாஸ்டிக் தீமைகள்,மழைநீர் சேமிப்பு,விவசாயத்தை காப்பதற்கான ஆலோசனைகள்,நூலகத்தின் பயன்கள்,வாசிப்புத்திறனை மேம்படுத்துதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,உணவே மருந்து,இயற்கையை காப்போம்,உலகமே உள்ளங்கையில் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் வலுவான வலைப்பின்னல் அமைத்தல்,குறிப்பாக அரசியல்,சாதி,மதம்,இனம்,மொழி கலப்பில்லாமல் சமூகம் என்ற பொது நோக்குடன் செயல்படுத்துதலுகான ஆலோசனைகள் என பல்வேறு விவாதங்களை நடத்த உள்ளோம்.
(10)நன்றியுரை
(11) தேசிய கீதம்...
என சுதந்திர தினத்தன்று  பல்நோக்கு நிகழ்ச்சியாக நடத்த உள்ளதால் அனைவரும் வாங்க,முன்னரே வருகையினை பதிவு செய்க.அப் போதுதாங்க நிகழ்விடம் அமைக்கவும்,உணவு ஏற்பாடு செய்யவும் இயலும்.
         


Odi Vilayadu Paapa- Patriotic songs - Tamil

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பனை மரம்-




பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

திருநீறு வகைகளும் அதன் நன்மைகளும்.

மரியாதைக்குரிய நண்பர்களே,
           வணக்கம். திருநீறு பற்றிய பதிவு இது.பதிவிட்ட நண்பர் திரு.அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
திருநீறு வகையும் அதை இடுவதால் ஏற்படும் நன்மைகளும் !
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி)
குறிக்கின்றது.வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.
திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப்
பூமியில் விழாது தாமரை இலையில்
பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம
மந்திரங்களால் சிவாக்கினியில்
எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.

2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக்
கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவத
ு அணுகல்பத் திருநீறு.

3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும்
இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக்
காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில்
எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு.

4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும்
சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத்
திருநீறு.

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின்
எஞ்சியது நீறு.நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த
நிலைக்கு அடையாளமும் ஆகும்.புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன ;
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்:
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை,உயர்ந்த நற்குணங்கள்,குறைவற்ற செல்வம்,நல்வாக்கு,நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார் பாருங்களேன்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே !

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

I LOVE SATHY-நான் விரும்பும் சத்தியமங்கலம்.



மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம்.

                  நான் விரும்பும் சத்தியமங்கலம் என்னும் I LOVE SATHY  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 


                இந்த அமைப்பை உருவாக்குவது பெரிய விசயமே இல்லைங்க!.நல்ல முறையில் சுயநலமின்றி,அரசியல் கலப்பின்றி,சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி  சிறுகச் செய்தாலும் சிறப்பாக செயல்படுத்தவேண்டும்.

              I LOVE SATHY -இணையதள நண்பர்கள் குழு- நிறுவனர் திரு.சதீஷ்குமார் அவர்களது ஆலோசனைப்படி வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி காலை11 மணிக்கு இடம் தற்போதைக்கு,''லோகு டிரைவிங் ஸ்கூல்''வளாகம்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.
   ( நண்பர்கள் வருகையை பொறுத்து இடம் மாறுதலுக்குட்படலாம்). 
       நம்ம சத்தியமங்கலத்தில்,அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி என்ற வேறுபாடின்றி மனித சமூகம் என்ற பொது நோக்கில்,அறிமுகம் மற்றும் முதல் நிகழ்வாக, '' இணையதள நண்பர்கள் குழு'' சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அது சமயம் இன்றைய சூழலுக்கேற்ப நம்ம சத்தியமங்கலத்திற்கு சமுதாய நலனுக்கான பணிகள் மற்றும் இளைய சமுதாயத்திற்கு எதிர்காலத்திற்கான வழிகாட்டும் முறைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அப்போது சத்தியமங்கலம் பற்றிய தகவல் சிற்றேடு ஒன்றும் வெளியிடலாமா? என்பது போன்ற விவாதங்கள் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்தினையும் கூறுங்க.அனைவரின் ஆலோசனைகளையும் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்பதால், நீங்களும் வாங்க! உங்களுக்குத்தெரிந்த நண்பர்களையும் அழைத்து வாங்க!! நட்பில் இணைந்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்பதில்லைங்க,அன்றைய தினம் கூட நேரில் வந்து இணையலாம்!!!!.......