சனி, 14 செப்டம்பர், 2013

21-வது NCSC வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-2013

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக - சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மேல்நிலை பள்ளியில், 21-வது  NCSC -வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் விவரம் இங்கு காண்போம்.
               
              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தியமங்கலம் 
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   
             இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீராகவேந்திரா  மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக 21 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.


              இந்த பயிற்சி முகாமிற்கு திரு.உமாசங்கர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை நிகழ்த்தினார்.




                    திரு.சண்முகநாதன் PRO அவர்கள் ஸ்ரீராகவேந்திரா மேல்நிலை பள்ளி -சத்தியமங்கலம் .முன்னிலை வகித்து முன்னுரை நிகழ்த்தினார்.
  

              திரு.S.C.நடராஜன் -சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.


        முனைவர்.N.மணி அவர்கள்,மாநில தலைவர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.மற்றும் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் .துவக்கவுரை நிகழ்த்தி கருத்துரை வழங்கினார்.
      

                  திருமதி.K.காந்திமதி அவர்கள் NCSC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் -தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பு.National Childrens Science Congress அறிமுகவுரை நடத்தினார்.
          
                  துளிர் இல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களை முனைவர் .நா.மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில தலைவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

                திரு.தாமரை செல்வன் அவர்களை திரு.நடராஜ் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து காகிதக்கலை பற்றிய செய்முறைகளுக்கு அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

      
      கடந்த கால NCSC மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்து அதன் பலனை அந்த மாணவர்கள் அனுபவிக்கும் வாய்ப்புகளை பற்றி விளக்குகிறார் .




        NCSC -பயிற்சி கொடுக்கும் அறிஞர் ஒருவர்.


     திரு.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட செயலாளர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் திரு.உமாசங்கர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்-முன்னாள் தலைவர் அவர்களும் பயிற்சி நிகழ்வை பார்வையிடும் காட்சிங்க!.
   


               நன்றியுரை;- திரு.C.பரமேஸ்வரன்- அவர்கள் தலைவர்  -தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.இந்த வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கு ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுபது பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
     விண்ணப்பம் கொடுக்க வேண்டிய கடைசி தேதி; 30-செப்டெம்பர்-2013.
  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி;-
             திருமதி.K.காந்திமதி அவர்கள்,
            W/O முனைவர்.N.மணி அவர்கள்,
          59/1K.K.நகர்,
சென்னிமலை ரோடு,
ஈரோடு-638009
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி# 9443983977
   அல்லது விண்ணப்பம் நேரில் கொடுக்க வேண்டிய முகவரி;-
                 திரு.சக்ரவர்த்தி அவர்கள்,BRT மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டத்தலைவர்.RMSA அருகிலுள்ள ஈரோடு BRCஆபீஸ்.
மேலும் கூடுதலான தகவல்களுக்கு அணுக வேண்டிய அலைபேசி எண்கள்;-
(1)திரு.உமாசங்கர் அவர்கள்-94424471633 
(2)திரு.R.M.சுப்ரமணியம் அவர்கள்-9442930360
           ''ஆற்றல்'' பற்றிய கூடுதல் தகவல் ஆங்கிலமொழியில் பெற www.ncsc2010tnsf.blogspot.com என்ற வலைப்பக்கம் செல்க.மற்றும்
www.tnsferode.blogspot.com வலைப்பக்கம் செல்க.   
                        பதிவேற்றம்=சி.பரமேஸ்வரன்-
                        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                     தாளவாடி -ஈரோடு மாவட்டம்.