திங்கள், 24 பிப்ரவரி, 2014

அரசு பேருந்தில் முன் டயர் வெடிப்பு-

Parameswaran Driver shared Kandh Praba's புகைப்படம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைங்க!இது???????!!!!!!!!..இது மட்டுமல்ல! பேருந்தின் கொள்ளளவுக்கும் அதிகமாக பயணிகளையும்,பள்ளிக்குழந்தைகளையும்,இலவச பயண அனுமதியாளர்களையும் ஏற்றிக்கொண்டு,மலைப்பாதையில்,ஹெல்பருக்காக பொருத்தப்படும் ஹெல்பர் ஸ்பிரிங் அசெம்பிளியோ,ஸ்பிரிங் மெயின்லீப் 180 டிகிரிக்கும் அதிகமாக சுழலாமல் இருக்க பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் ரப்பர் ஸ்டாப்போ,ஷேக் அப்சர்பரோ,இல்லாமல்(வாகன தயாரிப்பாளர் பொருத்தி அனுப்புகின்றனர் அது வேறு விசயம்) ஐம்பத்தைந்து நபரை மட்டுமே தாங்கும் தகுதியுள்ள பேருந்தில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அபாயமான நிலையில் ஓட்டுனரும்,நடத்துனரும் உயிரை பணயம் வைத்து பயணிக்கையில் முன் இடது ஸ்பிரிங் அசெம்பிளி பாரம் தாங்காமல் அதே சமயம் பாதுகாப்பில்லாத ஸ்பிரிங் மெயின் லீப் சுழல் கோணம் அதிக அளவு ஏற்பட்டு அதனால் நடுப்பகுதி உடைவு ஏற்பட்டு ஓட்டுனர் சாமார்த்தியத்தால் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தும் கிளை நிர்வாகம் ஸ்பிரிங் லீப் எந்த பகுதி உடைந்தது என்று குறிப்பிடாமல் பொதுவாக ஓட்டுனர் உடைத்துவிட்டார்? என்று புகார் கொடுத்து அதற்கான தண்டனையும் அதாவது ஓட்டுனர் கவனக்குறைவாகவும்,ஆஜாக்கிரதையாகவும்,அதிவேகமாகவும்? (பேருந்து அளவான பயணிகள் ஏறினாலே இஞ்சின் இழுவைத்திறன் குறைந்து அதனால் முதல் கியரிலேயே ஓட்டும்நிலை அது வேறுவிசயம்) சாலையின் தன்மைக்கேற்ப இயக்காததே உடைவிற்கு காரணம் என சரியாக விசாரிக்காமல் நீதி வழங்கி தண்டனையும் கொடுத்துள்ளது.இந்த நிர்வாகம்.அதுபேலவே முன் டயரு வெடிப்பிற்கும் காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவு,அதிவேகம் காரணமாக என்று குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிப்பார் ஓட்டுனர்.இதற்காகவே சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சமூக ஆர்வலர்கள்,சட்ட வல்லுனர்கள்,நீதியரசர்கள்,நெடுஞ்சாலைத்துறையினர்,ஓட்டுனர்,நடத்துனர்,போக்குவரத்து துறை அதிகாரிகள்,தொழில் நுட்ப பணியாளர்கள்,வாகன முதலாளிகள்,வாகன தயாரிப்பாளர்கள்,இயந்திரப்பொறியாளர் குழு,உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள்,விபத்து ஆய்வறிக்கை குழு,கல்வித்துறை சார்ந்தவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்ந்தவர்கள்,தினசரி பயணிக்கும் மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பொது விவாதம்,கருத்துக்களம், பொதுமக்கள் மத்தியில் நடத்த வேண்டும் உண்மைநிலை வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.ஒத்துழைப்போமா?
சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து TN33-2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,
ஓட்டுனரின் திறமையால் எந்த வித சேதமுமின்றி
பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று டயர் பொருத்தி இயக்கப்பட்டது.
இதில் அதிசயம் என்னவென்றால் வெடித்த டயர் Original Radial ஆகும்.
அது என்ன Radial என்கின்றீர்களா?
Nylon நூலுக்குப் பதிலாக Steel கம்பிகள் கொடுத்து தயாரிக்கப்படுவது Radial
டயர் ஆகும்.
Nylon டயரை விட அதிக தரம் வாய்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துத் கழகதில் அதிகமாக Radial டயர் வாங்கி பொருத்தப்படுகிறது.
அட இதில் தவறு என்ன?வினோதம்என்ன?. என்கிறீர்களா?.
அட Steel கம்பிகள் பொருத்தப்பட்ட புதிய Radial டயர் வேட்டுக்கிளப்பியது
மட்டுமல்ல வினோதம்.
{பிரச்சனை என்னவென்றால் வேட்டுக்கிளப்பிய Radial டயரில் மருந்துக்குக்கூட
Steel கம்பியோ வேறு எதுவுமோ கொடுக்கப்படாமல் முழுக்கமுழுக்க ரப்பரை மட்டுமேகொண்டு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சப்ளை செய்யப்பட்டதுதான். }
ம் -என்றால் மெமோ, ஆ-என்றால் தண்டனை கொடுக்கத்
தயங்காத போக்குவரத்துக்கழகஅதிகாரிகள்
மேற்கண்ட டயரை என்ன தர ஆய்வு செய்து வாங்கினார்களோ!!
[என்ன சிதம்பர இரகசியமோ!!]
யாருக்கு தண்டனையோ? யார் கண்டது?.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறுபதம்.

thanks-- www.ttsftnstc.blogspot.in

www.ttsftnstc.blogspot.in/2014/02/blog-post.html

======================================
  • நீங்கள் மற்றும் Pudumai Balakrishnan இருவரும் இதனை விரும்புகிறீர்கள்.
  • Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இந்த நிலை TN33-N2623 பேருந்திற்கு மட்டும் இல்லைங்க.ஏறக்குறைய அனைத்து பேருந்துகளுமே இதே கதியில்தாங்க ஓடுகிறது..மக்களுக்காக ஓட்டும் பேருந்து மக்களையல்லவா பலிவாங்குகிறது.எறியப்பட்டவரை குற்றம் சாட்டாமல் எய்தவர்கள் உணர வேண்டும்.
  • Pudumai Balakrishnan பணி மனை என்ன செய்கிறது? ஒரு வாகனத்தில் குறிப்பிட்ட பழுது ஏற்பட்டால் அதைக் குறிப்பிட்டு பழுது மனையில் விட்டு சீர் செய்யவேண்டுமே! இது போன்ற பிரச்சினைகளுக்கு சங்கம் போராடுவதில்லை; ஏன்! நல்ல பகிர்வு!
  • Parameswaran Driver மரியாதைக்குரிய ஐயா,எனது பணியின்போது நடந்த நிகழ்வுதாங்க,முன் ஸ்பிரிங் பட்டை உடைந்த நிகழ்வு.அதில் அந்த ஸ்பிரிங் பட்டைக்கு பாதுகாப்பான உபரி பாகங்கள் எதுவுமே இல்லைங்க.நடுப்பகுதி உடைந்து உள்ளது என்று குறிப்பிட்டு பதில் கொடுத்தேன்.அதற்கு ஏற்க முடியாது.ஓட்டுனரே பொறுப்பு என்று உத்தரவு பெற்றேன்.கழகத்தின் உள்ளக விசாரணை நடுநிலையிலிருந்து தவறிவிட்டது? என்பதே எனது குற்றச்சாட்டு.அடுத்து வற்புறுத்தி என் மீது எழுதி வாங்கப்பட்ட புகார் எழுதி அனுப்பிய திரு.பொறியாளர் அவர்கள் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்.அதற்காகவே அதனை அந்த பிரச்சனையை முடித்துக்கொண்டேன்.(பயணிகளையும்,பள்ளிக்குழந்தைகளையும் காப்பாற்றிய உள்மனது உணர்வோடு) தங்கள் மேலான சிந்தனைக்கு..ஸ்பிரிங் அசெம்பிளி நடுப்பகுதி உடைவது ஓட்டுனரே முழு காரணம் என்கின்றனர் இங்குள்ள நிர்வாகத்தினர்.(அதேபோல ஆயுட்காலம் எதுவுமே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்குமாம்.என்ன வேடிக்கை பாருங்கள்.) அதேபோல் உள்ளக விசாரணையாளர்கள் உண்மைநிலை ஆராய்வதில்லைங்க!.அதேபோல் அதிகாரிகளின் பணிவிரோத செயல்களில் ஈடுபட ஒத்துழைப்பு கொடுக்காத தொழிலாளர்கள் பலிவாங்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் ஒரே தீர்வு அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி உண்மை நிலை அறிய வேண்டும் .என்கிறேன்.தங்களது கருத்து தெரிவியுங்கள்.நன்றிங்க.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக