புதன், 17 செப்டம்பர், 2014

INTERNET TAMIL FRIENDS -தமிழ் இணையதள நண்பர்கள்.

 மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.தமிழ் இணையதள நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம். சத்தி புத்தக கண்காட்சி வருகிற 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 9.00மணி வரை  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அத்தாணி ரோட்டிலுள்ள கொங்கு திருமண மண்டபம் வளாகத்தில் ,அரங்கு நிறைந்த புத்தக திருவிழாவாக நடைபெற உள்ளது.
                 அது சமயம் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு&சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு இணைந்து  16-10-2014 வியாழக்கிழமை ஒருநாள் நிகழ்வினை நடத்துகின்றன.அன்றைய தினம் 
          
          புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கில் ,
    
             காலை 10.00மணி முதல் 12.00மணி வரை சாலை பாதுகாப்பு- சமூகப் பாதுகாப்பு என்ற தலைப்பில் பள்ளிகளின் குழுவினருக்கு இடையேயான வினாடிவினா போட்டியினை -சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்-சத்தியமங்கலம் நடத்துகிறது.

       மாலை 3.00 மணி முதல் 4.00மணி வரை  நம் வாழ்வாதாரத்திற்கு அதிகம் பயன்படுவது புத்தகங்களா? இணையதளமா? என்றதலைப்பில் புத்தக வாசகர்கள் மற்றும் இணையதள தமிழ் நண்பர்கள்  விவாத நிகழ்ச்சி நடைபெறும். 
     மாலை4.00மணி முதல் 6.00 மணி வரை  '' தமிழில் இணையத்தை எளிதாக வெல்வோம்'' என்ற தலைப்பில்
   இணையதள தமிழ் நண்பர்களால்  கணினி மற்றும் இணையதள பயன்பாடு   தேவைகளான
 (1)மின்னஞ்சல் நமக்கென தனியாகஉருவாக்குவது
 (2) தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எளியமுறையில் அரை மணி நேரத்தில் தட்டச்சுப் பயிற்சி,
(3)நமக்கென தனியாக இலவசமாக வலைத்தளம் உருவாக்கிக்கொள்வது அதன் மூலம் நம் தேவைகளை நிறைவேற்றுவது,விளம்பரம் செய்வது,,
(4) அனைத்து தரப்பினருக்கும் தேவையான -காணொளி உட்பட நமது தேவைக்கான தகவல்களை தேடுவது,பதிவிறக்கம் செய்வது,பதிவேற்றம் செய்வது,
(5)அரசு மற்றும் தனியார் சார்ந்த பல விசயங்களை இணையதளம் வாயிலாக  அவற்றில் தகவல் பரிமாற்றம் செய்வது,
(6)காணொளி நேர்காணல் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்கள் என்றால் என்ன?அதனை பூர்த்தி செய்வது எப்படி?
(7)சமூக விழிப்புணர்வு பெறுவது,வேலை தேடுவது,தொழில் கற்பது,பயிற்சி பெறுவது,
(8)கல்வி கற்பது,தொழில் நுட்பங்கள் கற்பது,மொழிகள் கற்பது,மென்பொருட்கள் கற்பது,
(9)போட்டித்தேர்வுகள் எதிர்கொள்வது,
(10)தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்வது,
(11)வேளாண்மை பற்றிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த விளைபொருட்களை விற்றல் வாங்கல்,மார்க்கெட் நிலவரம்,பருவநிலை மற்றும் மழை போன்ற விவரங்களை  தெரிந்துகொள்வது,
(12)சமையல் கலை ,அழகுக்குறிப்புகள், ஆயுர்வேதிக்,யுனானி,சித்தா,இயற்கை,நாட்டு மருத்துவங்கள்,அல்லோபதி,போன்ற மருத்துவத்தேவைகளை அறிவது,(13)புகைப்படக்கலை,திரைப்படக்கலை,போட்டோசாப்,கோரல்டிரா,அலுவலக பயன்பாடு சம்பந்தமான எம்.எஸ்.ஆபீஸ்,டாலி,போன்ற மென்பொட்களின் பயன்பாடு அறிவது,
(14) உலக அதிசயங்களை,உலக நிகழ்வுகளை,கண்டறிவது,
(15)வீடியோ வழி உரையாடுதல்,வீடியோ,புகைப்படங்கள்,தகவல்கள் அனுப்புதல்& பெறுதல்,
(16)வங்கி கணக்கு துவக்குவது,ஆன்லைனில் பொருட்களை வாங்குவது,மின் கணக்கு கட்டுதல்,எல்.ஐ.சி.கணக்கு கட்டுதல்,
       என அனைத்து வகைகளுக்குமான இலவச களப்பயிற்சி நடத்தப்படும்.
மாலை 6.30 மணிக்கு சிறப்புரை  அரிமா.K.லோகநாதன்-லோகு டிரைவிங் ஸ்கூல் அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.
                                                                                   என,
                                                                              அன்பன்,
                                                                      பரமேஸ்வரன்.C

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக