வெள்ளி, 9 நவம்பர், 2012

அறிவியலைப் பரப்புவோம்! ஆபத்தைத் தவிர்ப்போம்!!

மரியாதைக்குரிய நண்பர்களே,

        tnsfsathy.blogspot.com வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   
 பட்டாசு போன்ற வாணவெடிகளால் சமூகத்திற்கு என்னங்க நன்மை?
 பட்டாசு என்பது கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும்.

இவை ஒளி தருவதை விட பெரும் சத்தத்தை (ஒலியை) உண்டாக்குவதையே நோக்கமாகக்கொண்டுள்ளன.
 வாண வேடிக்கை என்பது எரித்தல் அல்லது வெடித்தல் ஆகும்.இவை பலவகையான காட்சித்தோற்றங்களை ஏற்படுத்தும் ஒரு பொழுது போக்கான நிகழ்ச்சி ஆகும்.
சீனாவில் ஏழாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பட்டாசு பற்றி சிறிது அறிந்து கொள்வோம்!.
  இவை நான்கு முக்கியமான விளைவுகளை உண்டாக்குகின்றன.அவை (1)ஒலி,(2)ஒளி,(3)மிதக்கும் தூசிகள்,(4)புகை (விஷவாயு)  ஆகும்.
  பட்டாசுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் கந்தகம்,கரி,பொட்டாசியம் நைட்ரேட்,அலுமினியம்,மக்னீசியம்,மக்னாலியம்,இரும்பு,டைட்டானியம்,
பெரோடைட்டானியம்,டெக்ஸ்ட்ரின்,நைட்ரோசெல்லுலோஸ்,பேரீயம்,
செம்பு,இஸ்ட்ரோனியம்,குளோரைடுகளும்,நைட்ரேட்டுகளும்,இன்னும் பலவிதமான வேதிப்பொருட்கள் ஆகும்.
 இந்த வேதிப்பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தன்மையைக் கொண்டவை.
  
அதாவது மத்தாப்புகள் நின்று எரிய,பலவித வண்ணங்களை வெளிப்படுத்த,என்பன போன்ற பயன்பாட்டிற்கும்,வாணவேடிக்கைகளுக்கான வெடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒலிகளுடனும்,ஒளிகளுடனும் நமக்கு பல்வேறு வண்ணங்களுடன் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அழகுக்காகவும்,பொழுதுபோக்குக்காகவும் மட்டுமே பயன்படுகின்றன.
மேலும் இவை சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. 





                                                                                   நன்றிங்க! என
                                                                                 PARAMESWARAN.C
                                                                                 TAMIL NADU SCIENCE FORUM
                                                                                 THALAVADY-SATHY
                                                                                 ERODE Dt.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக