வெள்ளி, 23 நவம்பர், 2012

தேசிய அறிவியல் குழந்தைகள் மாவட்ட மாநாடு ஈரோடு-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
                                                           வணக்கம்.
               மத்திய அரசின் தொழில்நுட்பத்துறையின் உதவியோடு ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான -நமது ஈரோடு மாவட்ட மாநாடு          இன்று 23-11-2012 வெள்ளிக்கிழமை, சத்தியமங்கலம் -காமதேனு கலை & அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

                                    
                
              திருமிகு.V.உமாசங்கர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாவட்டத்தலைவர்  தலைமை தாங்கினார்.

       ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வருகை புரிந்த இளம் விஞ்ஞானிகள் தமிழ்த்தாய்ப் பாடல் இசைக்க!  விழா காலை 10மணிக்கு  இனிதே துவங்கியது.

       
       திருமிகு.P.ரேவதி அவர்கள்-மாவட்ட ஒருங்கிணைப்பாளர்-NCSC வரவேற்பு வழங்கினார். 


      காமதேனு கலை & அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமிகு.முனைவர்.மோகன்தாஸ் அவர்கள்  முன்னிலை வகித்து துவக்கவுரை  வழங்கினார்.  
  
    
           திருமிகு.S.C.நடராஜன் இயக்குநர்-சுடர் தொண்டு நிறுவனம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
    திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள் ,தலைவர், தாளவாடி ஒன்றியக் கிளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம். துவக்கவிழா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  நன்றியுரை வழங்கினார்.


    மாவட்டம் முழுவதும் இருந்து  வருகை தந்துள்ள குழந்தைகளால் இருபத்தாறு ஆய்வுகள் -ஆற்றல்- தலைப்பில் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டன.
      திருமிகு. C. பரமேஸ்வரன்-T.N.S.F. அவர்கள் தலைமையில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும் இடைப்பட்ட காலை 11-30 மணி முதல் மதியம்1-00மணி வரை  வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒருங்கிணைத்து அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. 
                          மதிய உணவு இடைவேளை=
       மதியம்1-00மணி முதல் மதியம் 2-00மணி வரை.....

               திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள் மாலை2-00மணி முதல் மாலை 3-30  மணி வரை கணித மேதை ராமானுஜம் பற்றி கருத்துரை வழங்கினார்.மற்றும் கணிதம் தோன்றி வளர்ந்த விதம் குறித்த கருத்தரங்கத்தில் எண்களின் ராஜா இந்தியர்கள்! இதில் அராபியப்படையெடுப்பின் காரணமாக சமஸ்கிருதமும் அதனால் சூன்யா அறியப்பட்டு தசமங்களின் எளிய முறை இந்தியர்கள் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எனக் கருத்துக் கூற காரசாரமான விவாதம் நடந்தது. கணினி தொழில்நுட்பம்  குறித்து விவாதம் நடத்தப்பட்டது.A0 முதல் A10 பேப்பர் அளவு குறித்தும் செயல் விளக்கம் காட்டப்பட்டது.இதனிடையே தமிழ் சுருக்கெழுத்துப் பயிற்சி புத்தகம் பற்றியும் விளக்கம் தரப்பட்டது.
                 
                                              நிறைவு விழா


         தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டின்  நிறைவு விழா மாலை 3-30 மணிக்கு  
       திருமிகு.முனைவர்,V.பெருமாள் அவர்கள்.
                 மாவட்டத் துணைத் தலைவர்- 
                தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                  ஈரோடு மாவட்டம் தலைமையில் நடைபெற்றது.
   
     
               திருமிகு. சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
   
      வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
  
        திருமிகு. கவிஞர்.கோமகன்-கோயமுத்தூர். 
        அவர்கள் கவிதை நடையில் வாழ்த்துரையாற்றினார்.
               
         திருமிகு. S.சேதுராமன் அவர்கள்
                    மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC-2012 
                      (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) 
                                    வாழ்த்துரை ஆற்றினார்.
   
                    திருமிகு.G.நளினா அவர்கள். வாழ்த்துரை ஆற்றினார்.
  
              ஆய்வு திட்டப்பணியில்  தேர்வு செய்யப்பட்ட நான்கு பள்ளிக் குழுக்களுக்கு  திருமிகு. S.மோகன்தாஸ் அவர்கள் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி- முதல்வர்
  கேடயமும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்.
   
            திருமிகு.R.மணி -மாவட்ட செயலாளர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்.அவர்கள் நிறைவு விழாவின் நன்றியுரை ஆற்றினார்.
     
           இறுதியாக மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு. S.சேதுராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு மாநில மாநாட்டில் பங்கேற்பு செய்வது பற்றிய அறிவுரை வழங்கினார்.

1 கருத்து: