சனி, 12 ஜூலை, 2014

சம்மணமிட்டு அமர்ந்து உண்ணுங்க!

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
தரையில் அமர்ந்து உண்ணுவது நல்லதா?
-------------------------------------------------------------
தமிழ் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து உண்பது. முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் காரணம் என்ன தெரியுமா? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் விரைவில் சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக