வியாழன், 31 ஜூலை, 2014

I LOVE SATHY-நான் விரும்பும் சத்தி.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 நான் விரும்பும் சத்தி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். 
                  ஃபேஸ்புக் நண்பர் திரு.சதீஷ்குமார் அவர்களது ஆலோசனையின்படி மஞ்சள்நகரம் என்றழைக்கப்படும் - ஈரோடு மாவட்டத்தில் உள்ள, சந்தன நகரம் என்றழைக்கப்படும் -சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியை சேர்ந்த  இணைய தள பயனாளர்களாகிய 
 (1)ஃபேஸ்புக் நண்பர்கள், 
(2)வலைப்பதிவர்கள்,  
(3)இணையதள நண்பர்கள்-  
 என அனைவரும் இணைந்து,  
 I LOVE SATHY அதாவது '' நான் விரும்பும் சத்தி''   
என்னும் சமுதாய நலனுக்கான சேவைப்பணியாற்ற -  ஒரு குழுவினை துவக்கி உள்ளோம்.
          எனவே எவ்வித பாகுபாடுமின்றி சத்தியமங்கலத்தின் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து இணையதள நண்பர்களும் இணைந்து பெரிய சமூகப்பணியாற்றும் அமைப்பாக உருவாக்க ஆதரவு  கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிங்க.
தேதி; 31.07.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக