வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

நன்றி அறிவிப்பு பதிவு-15.08.2014

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
நன்றி அறிவிப்பு பதிவு இது ........அனைவரும் படியுங்க.........,தங்களது தளத்தில் பகிருங்க......நன்றிங்க.......
 
 
 
நன்றி அறிவிப்பு பதிவு...
மரியாதைக்குரியவர்களே,

       

வணக்கம்.திட்டமிட்டபடி 68ஆம் சுதந்திரதினமான நேற்று 15-08-2014 வெள்ளிகிழமை நமது சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நண்பர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக ,''இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி'' ரங்க சமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை11.00மணிக்கு நண்பர்கள் சுயஅறிமுகத்திலிருந்து துவங்கி பல்வேறு கருத்தாக்கங்களுடனும்,கலந்துரையாடல்களுடனும்,திட்டமிடலுடனும்,கருத்தரங்கம் மற்றும் விவாதங்களுடனும்,மதியம்2.10மணி வரை சுருக்கமாக! சுருக்கமாக!! என்று அவ்வப்போது அறிவுறுத்தியும் எவ்வித தொய்வுமின்றி மிக சந்தோசமாக-மன நிறைவாக நிறைவுற்றது.டாக்டர்.ப.பாலசுப்ரமணியம்(விஜயலட்சுமி) அவர்கள் அனைத்திந்திய தலைமை இயக்குநர்-அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் -ஈரோடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு மற்றும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அரசு பணி சார்ந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும்அந்த பயிற்சியில் சத்தியமங்லம் வட்டார இளைய சமுதாயத்திற்கு அனைத்து உதவிகள் செய்து கொடுப்பதாகவும்,நடிப்பு உள்ளிட்ட கலைத்துறையிலும் வாய்ப்பு அளிக்க போதுமான ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறி நமக்கு பெருமை தேடி தந்துள்ளார். அதே போல READ சமுக சேவை இயக்குநர் திரு.கருப்புசாமி அவர்கள் துவக்கவுரையில் மனித உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகள் பற்றி சிறப்பான உரை கொடுத்து நமக்கு விழிப்பு கொடுத்து உள்ளார்.நகராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் பள்ளியில் இடம் கொடுத்து ஆசிரிய,ஆசிரியை பெருமக்களின் உதவியோடு நிகழிடத்தின் அறையை அழகுபடுத்தி ,மின் வசதி ஏற்படுத்தி கொடுத்து,ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி கொடுத்து எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை ஏற்று நடத்தி கொடுத்து உள்ளார்.திரு.லோகநாதன்( லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இளைய சமுதாயத்திற்கு இயன்ற அளவு தன்னால் கொடுக்க முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர்15 தேதி முதல் 19 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.திரு.சதீஷ்குமார் அவர்கள் சென்னையிலிருந்து வருகை தந்து இணையதள நண்பர்களை ஒருங்கிணைத்து சிறப்பான வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.திரு.ஆனந்த் கோயமுத்தூர்அவர்கள் சமுகசேவை மற்றும் இளைய சமுதாயம் அனைவரையும் ஒருங்கிணைத்து இன்னும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்களை உயர்கல்வி ,ஒழுக்கம்,சுற்றுச்சூழல்,மனித உறவு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வை கொடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.அன்றைய தினம் காலையில்கூட இணையதள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு பத்து உறுப்பினர்களுடன் வருவதாக கூறி? புறப்படும் தருவாயில் எதிர்பாராத விபத்துக்கு ஆளாகி வர இயலாமையை மாலையில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்த திரு.சௌந்தர் திருப்பூர் அவர்களை பாராட்டுகிறோம்.தாங்கள் எல்லா வளமும் பெற்று இன்னும் வளமிக்கவராக உயரவேண்டும்.அப்போதுதாங்க எங்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கும்.(திரு.சௌந்தர் அவர்களுக்கு அனைவரின் சார்பாக கூறுவது என்னவெனில் தாங்கள் முதலில் தீ விபத்தின் வேதனையிலிருந்து மீண்டு வாருங்கள்,மீண்டும் சந்திப்போம்.நாம் எதையுமே இழப்பதில்லை-நமது மனதை இழக்கும்வரை என்ற கூற்றினை மனதில் வைத்துக்கொண்டு தில்லாக செயல்படுங்கள்.கேள்விப்பட்ட எங்களால் ஆறுதல் கூட கூற இயலாமையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.கண்டிப்பாக தங்களுடைய ஆர்வத்திற்கு என்றும் இணையதள நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.வருங்காலத்தில் தாங்களே முன்னின்று நடத்தலாம் வாங்க.) எத்தனையோ அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழில்கள் வேலைகள் இருந்தும் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு கலந்துகொண்டு சிறப்பித்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ஒருநாள் தாங்கள் செலவிட்ட நேரமானது வாழ்நாள் பயனுள்ள மூலதனமாக அமைந்து இருக்கும் என நம்புகிறேன்.மாறு கருத்து உள்ளவர்கள் கண்டிப்பாக இங்கேயே பகிரவும்.உங்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்.என அனைரவருக்கும் நன்றிகூறி இனி வருங்காலங்களில் இன்னும் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்கு அனுபவமே சிறந்த வழிகாட்டி ஆதலால் வாங்க அனுபவப்படலாம்.அடுத மாதம் தாளவடி வட்டார பள்ளி மாணவ,மாணவியருக்கான சதுரங்க விளையாட்டுப்போட்டி நடத்த உள்ளோம்.அதற்கு இணையதள நண்பர்கள அமைப்பு என்னமாதிரியான உதவிகள் கொடுக்கலாம் என கருத்து கூறுங்கள்.உங்கள் மனதில் என்ன உள்ளது? என்பதை தெரிவியுங்கள்.அடுத்த வேலையாக சத்தியமங்கலத்தில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் இணையதள நண்பர்கள் சார்பாக கொடுக்கும் உதவிகள் என்னவென்று அனைவரும் தங்களது கருத்தினை கூறுங்கள்.நம்ம சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பின் தளத்தை உங்களது பயிற்கு பயன்படுத்துங்கள்.பதிவிடுங்கள்.பகிருங்கள்.தவறு பற்றி கவலைப்படாதீர்.உங்கள் எண்ணங்களை கூறுங்கள்..என அன்புடன் -பொறுப்பாளர்கள் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு-தேதி 16-08-2014சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக