திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இணையதள நண்பர்கள் இயக்கம்-சத்தியமங்கலம்.

                                அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
                                        அதற்குப ஆங்கே செயல் - குறள் 333.
                                    ============================================



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். நான் விரும்பும் சத்தியமங்கலம் ( I LOVE SATHY )  வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். வருகிற 2014 ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சந்தன நகரம் என்னும் சத்தியமங்கலத்தில் உள்ள லோகு டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் இணையதள நண்பர்கள் இயக்கம் - துவக்கவிழா மற்றும் ''சமூக சேவை-நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி'' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.எனவே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
குறிப்பாக சத்தியமங்கலத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் உலகளவில் எங்கு என்ன பணி புரிந்தாலும் ஆதரவு கொடுத்து 
        தகுந்த ஆலோசனை கொடுத்து, நிதியுதவியும் கொடுத்து அதனை முழுமையாக,சிக்கனமாக  செலவிடப்படுகிறதா? எனவும் கண்காணித்து நம்ம வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டியாக உதவ அன்புடன் அழைக்கிறோம்..அனைவரும் வாங்க,,வளமான ஆலோசனை தருக...

         அதன் நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு.

 இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-சத்தியமங்கலம்.
 தினம் ஒரு நன்மை செய்வோம்-தினம் ஒரு குறள் படிப்போம்.
                       -- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - -- 
 இடம்;லோகு டிரைவிங் ஸ்கூல் -சத்தியமங்கலம்.
நாள்; 15 ஆகஸ்டு 2014.வெள்ளிக்கிழமை. நேரம் காலை 10.30 மணி.

(1) தமிழ்த்தாய் வாழ்த்து,
(2)தலைமை
(3)வரவேற்புரை
(4)துவக்கவுரை
(5)மௌன அஞ்சலி - 
                (சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கும்,தற்போது நாட்டைக் காக்க உயிர் நீத்த இராணுவத்தினருக்கும்,நம்ம நகர காவலர்களுக்கும்,தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களுக்கும்.)
(6)சமூக ஆர்வலர்களை நினைவு கூறல் மற்றும் போற்றுதல் (உதாரணமாக கல்விக்காக உதவி செய்யும்விஜயலட்சுமி அறக்கட்டளை திரு.ஆறுமுகசாமி ஐயா அவர்கள் ,கோபிசெட்டிபாளையம் அமரர் லட்சுமண அய்யர் அவர்கள்,அமரர் தாசப்ப கவுடர் அவர்கள்,கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை,இன்னும் நமக்கு தெரியாத அனைத்து சமூக நல சேவையாளர்களை கண்டுணர்தல் அவர்கள் போன்றோரை  வணங்கி பாராட்டு நல்குதல்).
(7)இணையதள நண்பர்கள் இயக்கம்- துவக்கத்தின் நோக்கம்.
(8)நிர்வாகிகள் தேர்வு
(9)கருத்தரங்கம்-
 தலைப்பு ; ''சமூக சேவை நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி''.
அன்றையதினம் -திட்டமிடல், உறுப்பினர் சேர்க்கை,நேர மேலாண்மை,நிதிமேலாண்மை,கலாச்சார பாதுகாப்பு,குடும்ப உறவு,முதியோர் ஆதரவு,குழந்தைகள் பாதுகாப்பு,பெண்கள் பாதுகாப்பு, பயணங்களில் பாதுகாப்பு,இளைய சமுதாயத்திற்கான வருங்கால தேவைகளை பூர்த்திசெய்ய தக்க வழிகாட்டி மையம் அமைத்தல்,விளையாட்டு போட்டி வைத்தல், இளைஞர்களை ஒன்று திரட்டி ஊர்க்காவல் படை அமைப்பு,கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தானம் செய்தல் விழிப்புணர்வு,சாலை பாதுகாப்பு,வேலை மற்றும் தொழில் வாய்ப்பு,விடுபட்டவர்களை இணைத்தல்,பிளாஸ்டிக் தீமைகள்,மழைநீர் சேமிப்பு,விவசாயத்தை காப்பதற்கான ஆலோசனைகள்,நூலகத்தின் பயன்கள்,வாசிப்புத்திறனை மேம்படுத்துதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,உணவே மருந்து,இயற்கையை காப்போம்,உலகமே உள்ளங்கையில் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் வலுவான வலைப்பின்னல் அமைத்தல்,குறிப்பாக அரசியல்,சாதி,மதம்,இனம்,மொழி கலப்பில்லாமல் சமூகம் என்ற பொது நோக்குடன் செயல்படுத்துதலுகான ஆலோசனைகள் என பல்வேறு விவாதங்களை நடத்த உள்ளோம்.
(10)நன்றியுரை
(11) தேசிய கீதம்...
என சுதந்திர தினத்தன்று  பல்நோக்கு நிகழ்ச்சியாக நடத்த உள்ளதால் அனைவரும் வாங்க,முன்னரே வருகையினை பதிவு செய்க.அப் போதுதாங்க நிகழ்விடம் அமைக்கவும்,உணவு ஏற்பாடு செய்யவும் இயலும்.
         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக