வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

இணையதள நணபர்கள் சந்திப்பு-தீர்மானங்கள்.2014

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். 
            இன்று 68ஆம் சுதந்திர திருநாள்..இன்று சந்தன நகரம் என்றழைக்கப்படும் சத்தியமங்கலத்தில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவக்கிய சிறப்பான நாள்...

                 15.08.2014வெள்ளிக்கிழமை இன்று காலை 11.00 மணிக்கு  ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம்- ரங்கசமுத்திரம்  MLA  (பவானிசாகர் சட்டமன்றத்தொகுதி)அலுவலகம் அருகிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் இணையதள நண்பர்கள் சந்திப்பு முதல் மற்றும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.திரு.R.சதீஷ்குமார்-சென்னை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திருமதி.M.செல்வி H.M. அம்மையார் அவர்கள் தலைமை ஏற்றார்.திரு.R.கருப்புசாமி (READ)இயக்குநர் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இணையதள நண்பர்கள் சந்திப்பு நோக்கம் பற்றி உரை நிகழ்த்தினார்.Dr.M.பாலசுப்பிரமணியம் (ஈரோடு)அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.திரு.S.V.ஆனந்த் (கோயமுத்தூர்)அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.திரு.`R.வினோத்குமார் B.E.,அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடு திரு C. பரமேஸ்வரன் அவர்கள் செய்து இருந்தார்.சத்தி வட்டார பகுதிகளிலிருந்து இணையதள நண்பர்கள் கலந்து கொண்டனர். கீழ்கண்டவாறு அதாவது (1) சத்தியமங்கலம் வட்டாரம் பற்றிய தகவல் ஏடு வெளியிடுவது,(2)இளைய முதாயத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டுவது,(3) அக்டோபர் 15 முதல் 19 வரை புத்தக கண்காட்சி நடத்த தேவையான உதவிகளை செய்வது குறிப்பாக விளம்பரம் செய்வது ,(4) வலிமையான வலைப்பின்னல் உருவாக்குவது,(5)ஏராளமான உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது,(6)Dr.P.பாலசுப்பிரமணியம்-ஈரோடு அவர்களை கௌரவ ஆலோசகராக ஏற்பது (7) போதை,புகை,மது பழகங்களின் தீமைகள்பற்றி விழிப்புரை கொடுப்பது,(8)பிளாஸ்டிக் ,மின்னணு சாதனங்கள் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு,தண்ணீர் மாசு,காற்று மாசு,போன்ற சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புரை செய்வது,(9) இளைய சமுதாயத்திற்கு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் திரைப்படத்துறை போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது,(10) சிவில் சர்வீஸ்,அரசுப்பணிகளுகான போட்டித்தேர்வுகள் வங்கி போன்ற நிதி மேலாண்மைத்துறைகளில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் கொடுப்பது,(11)வாசிப்புத்திறனை மேம்படுத்துவது மற்றும் அரசு நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க உதவி செய்வது,(12)அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உதவி செய்வது (13)சமுதாய நலப் பணிகளை தனியாகவோ,பிற அமைப்புகளுடன் இணைந்தோ செய்வது,(14) சத்தியில் ஊர்க்காவல் படை உருவாக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக