புதன், 14 டிசம்பர், 2011

சினை மாட்டுக்கான தீவனம் மற்றும் பராமரிப்பது

Archive for the ‘கால்நடை வளர்ப்பு’ Category

மாட்டு அம்மை

பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?
(கேள்வி : தேவராஜ், வேளத்தூர், பாபாநாசம், தாஞ்சவூர் மாவட்டம்)
காம்பில் கொப்பளம் உள்ளது. “மாட்டு அம்மை”(cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றையும் அரைத்தும் காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்.
பதில்  [...]

ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன?

(கேள்வி  : தெய்வாணை, அருப்புகோட்டை, விருதுநகர்)
புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

சினை மாட்டுக்கான தீவனம் மற்றும் பராமரிப்பது

மாடு 8 மாத சினையாக உள்ளது. எந்த மாதிரியான தீவனம் கொடுப்பது? எப்படி பராமரிப்பது?
(கேள்வி  : பழனிச்சாமி, செம்மேடு, கோயம்பத்தூர் மாவட்டம்)
முதலாவது 7 மாதம் முடிந்த உடனே பால் கறப்பதை நிறுத்துவது நல்லது. மேலும் சத்துள்ள சரிவிகித கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். பசுந்தீவன புல் குறைந்தபட்சம் 10 கிலோ கொடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் அதற்கு கிடைக்கும்படி வைக்க வேண்டும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print [...]

மாட்டின் மேல் அதிகமாக ஈ இருக்கிறது? என்ன செய்யலாம்?

(கேள்வி : சேகர், கொளத்தூர், ஆரணி, திருவண்ணாமலை)
சோற்று கற்றாழையின் சோற்றை எடுத்து நன்கு தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து பின் நீரால் கழுவவும். 2 அல்லது 3 நாட்களை தொடர்ந்து செய்யவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

4 மாத சினை மாடு பால் கறக்குது ஆனால் தீனி எடுக்க வில்லை?

(கேள்வி: சேகர், கொளத்தூர், ஆரணி, திருவண்ணாமலை)
மாட்டிற்கு காய்ச்சல் உள்ளதா என்று உஷ்ண மானியை (Thermometer)கொண்டு கண்டு கொள்ளவும். காய்ச்சல் இருப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறவும். தீனி எடுக்கவில்லையென்றால் ஹமாலயன் பெத்திசா(Himalayan Bathisa) என்ற மருந்தினை வாங்கி 50 கிராம் எடுத்து சிறிது வெல்லத்துடன் கலந்து உருண்டையாக்கி உள்ளுக்குள் தினமும் காலையும் மாலையும் 3 அல்லது 4 நாட்களுக்கு கொடுக்கவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print [...]

மாட்டிற்கு மடிநோய் வந்துள்ளது? அதற்கு என்ன செய்யலாம்?

(ரத்தினம், மேலூர்)
மடிநோய் வருவதற்கு முக்கிய காரணம் அது கட்டுத்துறை சுத்தமாக இல்லாததுதான். சுத்தமின்மை கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.
கட்டுத்துறை எப்பொழுதும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.
சாணம், மூத்திரம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.
மடி நோய் வந்துள்ள மடியில் வீக்கம் இருந்தால் கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்முன்றையும் மைய அரைத்து வீங்கி உள்ள மடியின் பக்கம் தடவவும்.
பால் கறப்பவர் பால் கறப்பதற்கு முன் தன்னுடைய கையை நன்றாக சோப்பினால் கழுவி சுத்தமாக துடைத்து பின் பால் கறப்பத [...]

தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்?

(சகாதேவனம், திருவாச்சியூர், ஆத்தூர், சேலம்)
கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும்.
முகவரி – கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக